Tuesday, June 28, 2022

ஆதிசங்கரர்- 16 (தொடர்)


 


தன் சீடர்களுடன் பல தலங்களுக்கு யாத்திரை செல்ல முடிவெடுத்தார் சங்கரர்.

ராமேஷ்வரம் சென்று வணங்கிய பின்னர் காஞ்சிபுரத்தை வந்து அடைந்தார்.அங்கு சாக்தர்கள் தந்திர வழிமுறைகளைப் பின் பற்றி வந்தனர்.அதை மாற்ற எண்ணிய சங்கரர்..சாக்கர்களை வாதத்தில் வென்று காமாட்சி அம்மனுக்கு ஸ்ரீசக்ரத்தை பிரதிஷ்டை செய்து வைத்தார்.ஸ்ரீசக்ரம் வைத்த பின் அம்பாளின் உக்ரம் குறைந்து சாந்த ஸ்வரூபியாய் அருள் பாலித்தார்.தாந்திரிக பூஜை முறையை வைதிக பூஜை முறைக்கு மாற்றினார்.

பின் காஞ்சியில் இருந்து புறப்பட்டு திருப்பதி சென்றார்.அங்கு வெங்கடாசலபதியை தரிசனம் செய்தார்.அங்கிருந்து கர்நாடகம் சென்று சங்கரர் அங்கு கபாலிகர்களையும்,பாஷாண்டகர்களையும் வாதம் செய்து வெற்றி கொண்டார்.அங்கிருந்து கோகர்ணம் சென்று சைவ குருவான திருநீலகண்டரை வென்றார்.அவரை அத்வைத சித்தாந்ததை ஏற்க வைத்தார்.பிறகு துவாரகா வந்த சங்கரர் வைஷ்ணவர்களை வென்று உஜ்ஜெயினி சென்றார். 

உஜ்ஜெயினில் பட்டபாஸ்கர் என்பவரை வென்றார்.இதனால் ஜைனர்கள் எதிர்த்தும்..அவர்களால் சங்கரரை வாதத்தில் வெல்ல இயலவில்லை.

பிறகு சங்கரர்,நவகுப்தர் எனும் சாக்கரை வென்றார்.இதனால் கோபமடைந்த நவகுப்தர், சங்கரருக்கு பகந்தரம் எனும் நோய் வரும்படி செய்தார்.ஆனால்..பத்மபாதரின் மந்திர சக்தி மூலம் அந்நோய் சங்கரரை நீங்கி நவகுப்தரையே சென்று தாக்கிய து.

பின், உஜ்ஜெயினிலிருந்து புறப்பட்டு இமயமலையை அடைந்தார் சங்கரர்.அங்கு தனது குருவான கோவிந்த பகவத்பாதரின் குருவான கௌடபாதரை சந்தித்து ஆசி பெற்றார்.

பின், தன் சீடர்களுடன்  சில காலம் கங்கை நதிக்கரையில் தங்கினார்.

No comments:

Post a Comment