Friday, July 8, 2022

ஆதிசங்கரர் - 17 (தொடர்)

 சர்வக்ஞபீடத்தில் அமர்தல்

------------------------------------

சங்கரர் இமயமலையில் கங்கைக் கரையில் தன் சீடர்களூடன் தங்கி வந்தார்.

அப்போது காஷ்மீரத்தில் அன்னை சாரதா ட்ஹேவியின் ஆலயம் உள்ளது.அம்கு ஒரு சர்வக்ஞபீடம் இருக்கிறது.இதில் எல்லாம் அறிந்த சர்வக்ஞர் மட்டுமே அமர முடியும்.

அதன் நான்கு பக்கங்களிலும் நான்கு வாசல்கள் உண்டு.வடக்கு,மேற்கு,கிழக்கு ஆகிய மூன்று திசைகளிலிருந்து அறிஞர்கள் வந்த அந்தந்த கதவுகள் திறந்தபடி உள்ளன.

ஆனால்,தெற்கு பக்கத்திலிருந்து ஒருவரும் வராததால் தெற்கு வாசல் மட்டும் மூடப்பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டார் சங்கரர்.

உடன், தென் திசைக்குச் சென்று ..தென்திசை கதவு வழியே அக்கோயிலுக்குள் நுழைய வேண்டும் என்று சென்றார்.அவர் தெற்கு வாயிலை அடைந்தார்.அங்கு பல மதங்களைச் சேர்ந்த அறிஞர்களை தமது வாதத் திறமையால் வென்றார்.தென் திசை கதவு திறக்கப்பட்டது.

சங்கரர்,பத்மபாதருடன் உள்ளே நுழைந்தார்.

அங்கிருந்த சிம்மாசனத்தில் அமரப் போனார்.

அப்பொழுது..சரஸ்வதி தேவியின் குரல் கேட்டது.இந்த சிம்மாசனத்தில் அமர சர்வக்ஞராய் இருந்தால் மட்டும் போதாது..சர்வசுத்தி உடையவராகவும் இருக்க வேண்டும் என்றாள் சரஸ்வதி.

அதற்கு சங்கரர்,பிறந்ததிலிருந்து தான் ஒரு பாவத்தையும் அறியேன்.நான் சர்வசுத்தன் என்றார்.

இதைக் கேட்டு மகிழ்ந்த சரஸ்வதி..சங்கரரை சர்வக்ஞபீடத்தில் அமரச் சொன்னாள்.

அதுமுதல் சங்கரர் ஜகத்குரு என அழைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment