Tuesday, June 21, 2022

ஆதிசங்கரர்- 14 (தொடர்)


 

சங்கரர் தன் சீடர்களுடன் சிருங்கேரியில் 12 ஆண்டுகள் தங்கியிருந்தார்.அப்போது சீடர்கள் பல நூல்களையும், சங்கரர் எழுதிய நூல்களுக்கு விளக்கவுரையும் எழுதினார்கள்.

இவ்வாறு இருக்கையில் தன் தாயின் இறுதி நாட்கள் நெருங்குவதை தன் ஞானதிருஷ்டியால் சங்கரர் உணர்ந்தார்.

தன் சீடர்களிடம் தாயாரின் நிலையைப் பற்றிக் கூறி..காலடி வந்தார்.

மகனைக் கண்டு தாய் மகிழ்ந்தாள்.

சங்கரர்,மிகவும் அன்புடன்.."அம்மா..கவலைப்படாதே...உனக்கு என்ன ஆசை..என்று கூறு.." என்றார்.

தன்னை சிவலோகத்துக்கு அனுப்ப வேண்டும்..என தாயார் கூற..சங்கரரும் "சிவபுஜங்கம்" எனும் ஸ்டோத்திரத்தால் பரமசிவனைத் துதித்தார்.சிவகணங்கள் உடன் அங்கு சூலத்தை ஏன்றியபடி தோன்றினர்.

இவைகளினால் பயந்த தன் தாயாரின் வேண்டுகோளுக்கு இணங்க.மகாவிஷ்ணுவை வேண்டி ஒரு பாடல் பாடினார் சங்கரர்.

உடன் விஷ்ணுவின் தூதர்கள் வந்து..தாயாரை விமானத்தில் ஏற்றிக் கொண்டு வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றனர்.

சங்கரர் தாயாருக்கு இறுதிச் சடங்குகளை செய்யத் தொடங்கினார்.

சங்கரரின் உறவினர்களும்,ஊராரும் சன்னியாசியான அவர் நெருப்பு சம்பந்தப்பட்ட சடங்குகளில் ஈடுபடக் கூடாது என்றனர்.சங்கரர் மனம் தளராமல் தன் தாய்க்குக் கொடுத்திருந்த சத்தியத்தைப் பற்றிக் கூறினார்.அதை அவர்கள் கேட்பதாக இல்லை.

உடன் சங்கரர்  உலக சம்பிரதாயத்தை மீறாமல்..அதேநேரம் ..தாய்க்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வகையில்..தன் வீட்டுக்கு அருகில் கட்டைகளை அடுக்கி..தனது யோக சக்தியால் வலது கையிலிருந்து அக்கினியை உண்டாக்கி அதில் தாயாரின் தகனக் கிரியைகளை செய்து முடித்தார்.


(தொடரும்) 

No comments:

Post a Comment