ஆதிசங்கரரின் சீடர் பத்மபாதர் "சாரீரக பாஷ்யத்திற்கு" விளக்க உரை எழுதினார்.அதில் கொஞ்சம் பாகம் ஆதிசங்கரருக்கு படித்துக் காட்டினார்.பிறகு அவருக்கு தீர்த்தாடனத்தில் ஆர்வம் ஏற்பட ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டார்.தனது சாரீரக பாஷ்யத்தையும் உடன் எடுத்துச் சென்றார்.
போகும் வழியில் ஜம்புகேஷ்வரத்தில்..அவரது மாமாவின் இல்லம் இருந்த்து.அங்கேபுத்தகத்தை வைத்து விட்டு ,திரும்பி வருகையில் எடுத்துக் கொள்ளலாம் என்று ராமேஸ்வரம் போனார்.
இவர் இல்லாதபோது..அவரது மாமா இந்நூலை படித்துப் பார்த்தார்."இந்நூல் நம் சித்தாந்தத்தை அழித்துவிடும் போல இருக்கிறதே" என நினைத்தார்."புத்தகத்தை அழித்துவிட்டால் போச்சு.மறுபடி இதேபோல எழுதுவது கடினம் "என்று எண்ணினார்.
அவருக்கு இரண்டு வீடுகள் இருந்தன.ஒரு வீடு சிதைந்திருந்தது.அதில் தேவையற்ற சாமான்களைப் போட்டு வைத்திருந்தார்.அந்தப் புத்தகத்தை அங்கு வைத்துவிட்டு..அந்த வீட்டிற்கு தீ வைத்து விட்டார்.
பத்மபாதர்,ராமேஸ்வரத்திலிருந்து வந்ததும்..விபரீதம் நடந்து விட்டதாக வேஷம் போட்டார்.
ஆதிசங்கரரிடம் வந்த பத்மபாதர்..நடந்த விஷயங்களைக் கூறினார்.
"நீ முதல் அத்தியாயம் நான்கு பாதமும், இரண்டாம் அத்தியாயம் முதல் பாதமும் என்னிடம் வாசித்துக் காட்டினாய் அல்லவா?..அதைத் திரும்பச் சொல்கிறேன்.எழுதிக் கொள்.அதவது உலகிற்கு கிடைக்கட்டும்"என்று ..தான் ஒரே ஒருமுறை கேட்ட்தை கடகடவென சொன்னார் சங்கரர்.
முதல் ஐந்து பாதங்களுக்கு விரிவுரை ஆனதால் இந்நூலிற்கு "பஞ்ச பாதிகா"என்று பெயர்.
No comments:
Post a Comment