Tuesday, June 28, 2022

ஆதிசங்கரர்- 16 (தொடர்)


 


தன் சீடர்களுடன் பல தலங்களுக்கு யாத்திரை செல்ல முடிவெடுத்தார் சங்கரர்.

ராமேஷ்வரம் சென்று வணங்கிய பின்னர் காஞ்சிபுரத்தை வந்து அடைந்தார்.அங்கு சாக்தர்கள் தந்திர வழிமுறைகளைப் பின் பற்றி வந்தனர்.அதை மாற்ற எண்ணிய சங்கரர்..சாக்கர்களை வாதத்தில் வென்று காமாட்சி அம்மனுக்கு ஸ்ரீசக்ரத்தை பிரதிஷ்டை செய்து வைத்தார்.ஸ்ரீசக்ரம் வைத்த பின் அம்பாளின் உக்ரம் குறைந்து சாந்த ஸ்வரூபியாய் அருள் பாலித்தார்.தாந்திரிக பூஜை முறையை வைதிக பூஜை முறைக்கு மாற்றினார்.

பின் காஞ்சியில் இருந்து புறப்பட்டு திருப்பதி சென்றார்.அங்கு வெங்கடாசலபதியை தரிசனம் செய்தார்.அங்கிருந்து கர்நாடகம் சென்று சங்கரர் அங்கு கபாலிகர்களையும்,பாஷாண்டகர்களையும் வாதம் செய்து வெற்றி கொண்டார்.அங்கிருந்து கோகர்ணம் சென்று சைவ குருவான திருநீலகண்டரை வென்றார்.அவரை அத்வைத சித்தாந்ததை ஏற்க வைத்தார்.பிறகு துவாரகா வந்த சங்கரர் வைஷ்ணவர்களை வென்று உஜ்ஜெயினி சென்றார். 

உஜ்ஜெயினில் பட்டபாஸ்கர் என்பவரை வென்றார்.இதனால் ஜைனர்கள் எதிர்த்தும்..அவர்களால் சங்கரரை வாதத்தில் வெல்ல இயலவில்லை.

பிறகு சங்கரர்,நவகுப்தர் எனும் சாக்கரை வென்றார்.இதனால் கோபமடைந்த நவகுப்தர், சங்கரருக்கு பகந்தரம் எனும் நோய் வரும்படி செய்தார்.ஆனால்..பத்மபாதரின் மந்திர சக்தி மூலம் அந்நோய் சங்கரரை நீங்கி நவகுப்தரையே சென்று தாக்கிய து.

பின், உஜ்ஜெயினிலிருந்து புறப்பட்டு இமயமலையை அடைந்தார் சங்கரர்.அங்கு தனது குருவான கோவிந்த பகவத்பாதரின் குருவான கௌடபாதரை சந்தித்து ஆசி பெற்றார்.

பின், தன் சீடர்களுடன்  சில காலம் கங்கை நதிக்கரையில் தங்கினார்.

Thursday, June 23, 2022

ஆதிசங்கரர்-15(தொடர்)

 ஆதிசங்கரரின் சீடர் பத்மபாதர் "சாரீரக பாஷ்யத்திற்கு" விளக்க உரை எழுதினார்.அதில் கொஞ்சம் பாகம் ஆதிசங்கரருக்கு படித்துக் காட்டினார்.பிறகு அவருக்கு தீர்த்தாடனத்தில் ஆர்வம் ஏற்பட ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டார்.தனது சாரீரக பாஷ்யத்தையும் உடன் எடுத்துச் சென்றார்.

போகும் வழியில் ஜம்புகேஷ்வரத்தில்..அவரது மாமாவின் இல்லம் இருந்த்து.அங்கேபுத்தகத்தை வைத்து விட்டு ,திரும்பி வருகையில் எடுத்துக் கொள்ளலாம் என்று ராமேஸ்வரம் போனார்.

இவர் இல்லாதபோது..அவரது மாமா இந்நூலை படித்துப் பார்த்தார்."இந்நூல் நம் சித்தாந்தத்தை அழித்துவிடும் போல இருக்கிறதே" என நினைத்தார்."புத்தகத்தை அழித்துவிட்டால் போச்சு.மறுபடி இதேபோல எழுதுவது கடினம் "என்று எண்ணினார்.

அவருக்கு இரண்டு வீடுகள் இருந்தன.ஒரு வீடு சிதைந்திருந்தது.அதில் தேவையற்ற சாமான்களைப் போட்டு வைத்திருந்தார்.அந்தப் புத்தகத்தை அங்கு வைத்துவிட்டு..அந்த வீட்டிற்கு தீ வைத்து விட்டார்.

பத்மபாதர்,ராமேஸ்வரத்திலிருந்து வந்ததும்..விபரீதம் நடந்து விட்டதாக வேஷம் போட்டார்.

ஆதிசங்கரரிடம் வந்த பத்மபாதர்..நடந்த விஷயங்களைக் கூறினார்.

"நீ முதல் அத்தியாயம் நான்கு பாதமும், இரண்டாம் அத்தியாயம் முதல் பாதமும் என்னிடம் வாசித்துக் காட்டினாய் அல்லவா?..அதைத் திரும்பச் சொல்கிறேன்.எழுதிக் கொள்.அதவது உலகிற்கு கிடைக்கட்டும்"என்று ..தான் ஒரே ஒருமுறை கேட்ட்தை கடகடவென சொன்னார் சங்கரர்.

முதல் ஐந்து பாதங்களுக்கு விரிவுரை ஆனதால் இந்நூலிற்கு "பஞ்ச பாதிகா"என்று பெயர்.

 

 

Tuesday, June 21, 2022

ஆதிசங்கரர்- 14 (தொடர்)


 

சங்கரர் தன் சீடர்களுடன் சிருங்கேரியில் 12 ஆண்டுகள் தங்கியிருந்தார்.அப்போது சீடர்கள் பல நூல்களையும், சங்கரர் எழுதிய நூல்களுக்கு விளக்கவுரையும் எழுதினார்கள்.

இவ்வாறு இருக்கையில் தன் தாயின் இறுதி நாட்கள் நெருங்குவதை தன் ஞானதிருஷ்டியால் சங்கரர் உணர்ந்தார்.

தன் சீடர்களிடம் தாயாரின் நிலையைப் பற்றிக் கூறி..காலடி வந்தார்.

மகனைக் கண்டு தாய் மகிழ்ந்தாள்.

சங்கரர்,மிகவும் அன்புடன்.."அம்மா..கவலைப்படாதே...உனக்கு என்ன ஆசை..என்று கூறு.." என்றார்.

தன்னை சிவலோகத்துக்கு அனுப்ப வேண்டும்..என தாயார் கூற..சங்கரரும் "சிவபுஜங்கம்" எனும் ஸ்டோத்திரத்தால் பரமசிவனைத் துதித்தார்.சிவகணங்கள் உடன் அங்கு சூலத்தை ஏன்றியபடி தோன்றினர்.

இவைகளினால் பயந்த தன் தாயாரின் வேண்டுகோளுக்கு இணங்க.மகாவிஷ்ணுவை வேண்டி ஒரு பாடல் பாடினார் சங்கரர்.

உடன் விஷ்ணுவின் தூதர்கள் வந்து..தாயாரை விமானத்தில் ஏற்றிக் கொண்டு வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றனர்.

சங்கரர் தாயாருக்கு இறுதிச் சடங்குகளை செய்யத் தொடங்கினார்.

சங்கரரின் உறவினர்களும்,ஊராரும் சன்னியாசியான அவர் நெருப்பு சம்பந்தப்பட்ட சடங்குகளில் ஈடுபடக் கூடாது என்றனர்.சங்கரர் மனம் தளராமல் தன் தாய்க்குக் கொடுத்திருந்த சத்தியத்தைப் பற்றிக் கூறினார்.அதை அவர்கள் கேட்பதாக இல்லை.

உடன் சங்கரர்  உலக சம்பிரதாயத்தை மீறாமல்..அதேநேரம் ..தாய்க்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வகையில்..தன் வீட்டுக்கு அருகில் கட்டைகளை அடுக்கி..தனது யோக சக்தியால் வலது கையிலிருந்து அக்கினியை உண்டாக்கி அதில் தாயாரின் தகனக் கிரியைகளை செய்து முடித்தார்.


(தொடரும்) 

Sunday, June 19, 2022

ஆதிசங்கரர்-13(தொடர்)

 



தோடகாஷ்டகம் !
------------------
ஆதிசங்கரர் சிருங்கேரியில் இருந்த போது காலநாத கிரி என்ற சிறுவன் அவரை வணங்கினான். பெரிய ஞானத் தேடலோ ஆன்மீக விழைவுகளோ இல்லாது இட்டபணி செய்து கொண்டு இன்பமாக இருந்து வந்தான் கிரி. ஆனால் சங்கரர் பெரிய ஞானி என்பதும் அவருக்குத் தொண்டு செய்வது நல்லது என்பதும் அவனது மனதில் ஆழப்பதிந்து இருந்தது. ஒரு நாள் தன் மூன்று சீடர்களுடன் வேதாந்த வகுப்பிற்கு அமர்ந்தார். கிரி துணிகளைத் துவைத்து உலர்த்திக் கொண்டிருந்தான். பாடத்தைத் தொடங்காது இருந்த குருவிடம் சீடர்கள் ஏனென்று கேட்க கிரி வரட்டும் என்றார் சங்கரர்.
அருகில் அமர்ந்திருந்த பத்மபாதர் ஒரு கல்லைச் சுட்டிகாட்டி அதற்குப் பாடம் சொல்வதும் கிரிக்குப் பாடம் சொல்வதும் ஒன்றே என்றார். சற்றே நகைத்த பகவத்பாதர் கிரியை அழைத்து ஆசீர்வதித்து இதுவரை நீ கற்றதைச் சொல் என்றார். அப்போது கிரி பாடிய எட்டுச் செய்யுட்கள் (அஷ்டகம்) குருவின் மகிமையை வியந்தோதுவதாக இருந்தது. சங்கர தேசிகாஷ்டகம் என்று அதற்குத் தலைப்பிட்டார் கிரி. அப்போதே கிரியை தோடகாச்சாரியார் என்ற சந்நியாசப் பெயருடன் தன் சீடர்களில் ஒருவராக ஏற்றார் பகவத் பாதர். அவர் பாடிய சங்கர தேசிகாஷ்டகம் அவரது பெயரிலேயே தோடகாஷ்டகம் என்று விளங்கட்டும் என்றும் ஆதிசங்கரர் ஆசீர்வதித்தார்.

ஸ்ரீ ஸ்ரீ தோடகாச்சாரியார் பாடிய தோடகாஷ்டகமும் அதன் அர்த்தமும்.
விதிதாகில சாஸ்த்ர ஸூதா ஜலதே
மஹிதோபநிஷத் கதிதார்த்தநிதே!
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

புகழ்பெற்ற கடல் போன்ற அனைத்து சாஸ்திரங்களையும் அறிந்தவரும், உபநிஷத்துக்களில் கூறி இருக்கும் தத்துவங்களை உணர்ந்து அதில் உறைந்தவரும் ஆன அந்த பரமேஸ்வரனுக்கு நிகரான சங்கர குருவே, உங்கள் பாதங்களில் என்னுடைய ஹ்ருதயத்தைச் சமர்ப்பிக்கிறேன். தாங்களே எனக்கு குரு, வழிகாட்டி (தேசிக என்பதற்கு இங்கே வழிகாட்டி என்ற பொருள்)

கருணா வருணாலய பாலய மாம்
பவஸாகர துக்க விதூன ஹ்ருதம்
ரசயாகிலதர்சன தத்வவிதம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

குருவே, எனக்கு எதுவுமே தெரியாதே! நான் நிர்மூடன்! எந்தக் கலையும் என்னால் அறியப் படவில்லை. ஆகையால் என்னால் பிறருக்குப்பயன் தரும் எந்த வித்தையையும் கற்பித்துப் பொருள் ஈட்டித் தங்களுக்கு வேண்டியவற்றைச் செய்து குரு தக்ஷிணையும் தர இயலவில்லை. இப்படி எதுவுமே இல்லாத ஏழையான எனக்குத் தாங்கள் தங்கள் சுபாவமான கருணையாலும், அன்பாலுமே அனைத்தையும் கற்பித்துக் காட்ட வேண்டும். ஹே சங்கரகுருவே, தங்கள் திருவடியே எனக்குச் சரணம்! கருணை நிறைந்தவரே, தங்கள் கருணையாகிய கடலால் இந்தப் பிறப்பு இறப்பு என்னும் சாகரத்தில் மூழ்கித் தவிக்கும் என்னைக் காத்துக் கரை சேருங்கள்.
என்னை ஞானவானாக ஆக்குங்கள். சங்கர குருவே தாங்களே எனக்குக் கதி! தங்களைச் சரணடைகின்றேன்.

பவதா ஜனதா ஸுகிதா பவிதா
நிஜபோதவிசாரண சாருமதே
கலயேச்வர ஜீவ விவேகவிதம்
பவ சங்கர தேசிகமே சரணம்!!
தாங்களே பரப்பிரும்மம். அதனால் தாங்கள் தெளிந்த ஞானத்தை உடையவராய் இருக்கிறீர்கள். தங்கள் ஞான போதனை எனக்கு மட்டுமின்றி உலகத்து மக்களுக்கும் பயன்பட்டு அதனால் க்ஷேமம் உண்டாகும். என்னை விவேகம் உள்ளவனாக என்னை ஜீவனை அறிந்தவனாக ஈஸ்வரனை அறிந்தவனாக மாற்றுங்கள். ஹே, சங்கர குருவே, தாங்கள் தான் எனக்குச் சரணம்!

பவ ஏவ பவானிதி மே நிதராம்
ஸமஜாயத சேதஸி கெளதுகிதா
மம வாரய மோஹமஹாஜலதிம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!
தாங்களே அந்த சாட்சாத் பரமேஸ்வரன். என்னுடைய சித்தம் பகுத்து அறிந்து காமத்தை விலக்கும் அறிவை நீங்களே எனக்குத் தரவேண்டும். என்னுடைய விருப்பமே தங்களால் எனக்கு ஞானம் ஏற்படவேண்டும் என்பதே! ஹே சங்கர குருவே சரணம்!

ஸுக்ருதே (அ)திக்ருதே பஹுதா பவதோ
பவிதா ஸமதர்சன லாலஸதா
அதிதீனமிமம் பரிபாலய மாம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!
தங்களின் எங்கும் பிரும்மமே என்ற கொள்கையே எத்தனைவிதமான புண்ணியங்களைச் செய்ததால் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும்?? எங்கும்
நிறைந்திருப்பது அந்தப் பிரம்மமே தான் என்ற இத்தகைய எண்ணம் ஏற்பட எத்தகைய புண்ணியங்களைச் செய்யவேண்டும்?? அப்படி ஒன்றுமே செய்யாமல் மிகவும் ஏழையாக இருக்கும் என்னை உங்கள் கருணை ஒன்றே காப்பாற்ற வேண்டும். ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!

ஜகதீ மவிதும் கலிதாக்ருதயோ
விசரந்தி மஹா மஹஸஸ்சலத:
அஹிமாம் சுரிவாத்ர விபாஸி குரோ
பவசங்கர தேசிக மே சரணம்!!
குருவே! தங்கள் உண்மையான ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டும் அத்தகைய ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு உலாவும் தேவாதி தேவர்களுக்கு நடுவே தாங்கள் ஒளி விட்டுப்பிரகாசிப்பது சூரியனைப் போல விளங்குகிறது. ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!

குருபுங்க புங்கவ கேதந தே
ஸமதாம் அயதாம் நஹி கோபி ஸுதீ:
சரணாகத வத்ஸல தத்வநிதே
பவ சங்கர தேசிக மே சரணம்!!
ரிஷபக் கொடியைக் கொண்ட பரமேஸ்வர ஸ்வரூபமே தாங்கள் தானே, குருக்களுக்கெல்லாம் மேலான குரு சிரேஷ்டரே! தங்களுக்கு ஈடு இணை எவரும் இல்லை. எப்படிப் பட்ட புத்திமானும் உங்களுக்கு இணையாக மாட்டானே! உம்மைச் சரணடைந்தால் கருணையுடன் ஆத்ம தத்துவத்தைப் போதித்து இவ்வுலக மாயையான சம்சாரக் கடலில் இருந்து தாண்டச் செய்பவரே! ஹே சங்கர குருவே தங்கள் திருவடி சரணம்!

விகிதா ந மயா விசதைககலா
நசகிஞ்சன காஞ்சந மஸ்தி குரோ
த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!
ஆழமாய் விரிந்த ஞானத்தில் சிறு கிளை அளவிற்கு கூட அறிவில்லாத அடியேனுக்கு அருள் கூர்ந்து வாழும் வழியை போதித்து வீழ்ச்சியில் இருந்து அடியேனை காப்பாற்றுவதற்கு நின் திருவடியை சரணடைந்தேன். ஹே சங்கர குருவே தங்கள் திருவடி சரணம்!

ஸ்ரீ குருப்யோ நமஹ !

Thursday, June 16, 2022

ஆதிசங்கரர்- 12 (குறுந்தொடர்)


 


சங்கரர்..கர்நாடகாவில்..துங்கபத்ரா நதிக்கரையில் இருந்த சிருங்கேரிக்கு வந்து சேர்ந்தார்.

தசரதர் புத்ரபாக்யம் வேண்டி செய்த புத்ரகாமேஷ்டி யாகத்தை நடத்தி வைத்த ரிஷ்யசிருங்க மாமுனிவரின் ஆசிரமம் அங்கு இருந்தது.

அங்கு நிறைமாத கர்ப்பிணியான ஒரு தவளை வெயில் தவிக்கும் போது..ஒரு நாகப்பாம்பு படமெடுத்து தன் தலையால் குடைபிடித்து அத்தவளையைக் காப்பாற்றிய காட்சியை சங்கரர் கண்டார்.

இயல்பாகவே விரோதிகளான இவை இரண்டும் ஒன்றாக இருப்பதைக் கண்ட சங்கரருக்கு அந்த இடம் மிகுந்த சக்தி வாய்ந்த இடமாகத் தோன்றியது.

முன் உபயபாரதியிடம் ,தான் விரும்பும் இடத்தில் அமர்ந்து அருள்பாலிக்க வேண்டும் என சொல்லியிருந்தது நினைவிற்கு வர..அதன்படியே அவளுக்கென ஒரு ஆலயத்தை அமைத்து பிரம்மஸ்வரூபிணியாக சாரதாபரமேஸ்வரியை பிரதிஷ்டை செய்தார்.

Sunday, June 12, 2022

ஆதிசங்கரர்- 11(குறுந்தொடர்)

 

தவளை, நாகப்பாம்பு நட்பு

இதன் பின் சங்கரர் துங்கபத்திரை நதிக்கரையில் உள்ள சிருங்கேரி என்னும் இடத்திற்கு வந்தார்அங்கு மாமுனிவர் ரிஷ்யசிருங்கர் ஆஸ்ரமம் இருந்ததுஅங்கு ஒரு தவளை கர்பமாக இருந்ததுவெயிலின் வெப்பம் தாங்காமல் தவித்த தவளைக்கு ஒரு நாகப் பாம்பு தன் தலையால் குடை பிடித்தது

இதை பார்த்த சங்கரர் வியந்தார்இயற்கையில் எதிரிகளான பாம்பும் தவளையும் சேர்ந்து இருப்பதை கண்ட சங்கரர் இந்த இடம் நிச்சயமாக ஒரு சக்திமிகுந்த இடமாகத்தான் இருக்க வேண்டும் என எண்ணினார்.

எனவே இந்த இடத்தில் சாரதாபரமேஸ்வரிக்கு ஒரு ஆலயம் நிறுவ முடிவு செய்தார்முன்பு உபயபாரதியிடம் வைத்த வேண்டுகோள்படி அங்கு ஒரு ஆலயத்தை கட்டி  பிரம்மஸ்வரூபிணியாக சாரதாபரமேஸ்வரியை பிரதிஷ்டை செய்தார்.

ஆதிசங்கரர்- 10 (குறுந்தொடர்)

 


சங்கரரின் மற்றொரு சீடர் ஹஸ்தாமலகர்


 சங்கரர் கர்நாடகாவில் பல புண்ணிய தலங்களுக்கு சென்றார். அப்போது ஸ்ரீவாடியில் கடவுள் பக்தியுள்ள ஒரு அந்தணர் தனது ஊமை மகனை அழைத்துக் கொண்டு சங்கரரிடம் வந்தார். 


அவரை நமஸ்கரித்து, ஐயா! என் மகன் ஊமையாக மட்டுமல்லாமல் மூளை வளர்ச்சியின்றி காணப்படுகிறான். தாங்கள் தான் அவனை குணப்படுத்த வேண்டும் என்று சொன்னார். 


சங்கரர் சிறுவனைப் பார்த்து, நீ யார்! ஏன் இப்படி ஜடம் போல் இருக்கிறாய் என்று கேட்டார். அதுவரை ஊமையாக இருந்த சிறுவன் பேச ஆரம்பித்தான். நான் ஜடமில்லை, சித்ஸ்வரூபி என்று பதிலளித்து 12 ஸ்லோகங்களால் ஆத்ம தத்துவத்தை விளக்கினார். இதுவே ஹஸ்தாமலகீயம் என்று சொல்லப்படுவது. சங்கரர் இதற்கு உரை இயற்றியுள்ளார். சங்கரர் அச்சிறுவனை ஆசிர்வதித்து, அவனுக்கு ஹஸ்தமாலகா (உள்ளங்கை நெல்லிக்கனி) என பெயரிட்டு தன் சீடராக ஏற்றுக் கொண்டார்.


ஹஸ்தாமலகருக்கு எப்படி பிறவியிலேயே, பாடம் கற்காமலே ஞானம் வந்தது என்று சீடர்கள் வினவ, சங்கரர் கூறினார். 

"யமுனா நதிக்கரையில் ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் ஒரு மாது தனது இரண்டு வயது பாலனை அவரிடம் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு நதியில் ஸ்நானம் செய்யச் சென்றாள். தற்செயலாக குழந்தை நதியில் விழுந்து இறக்க மக்கள், அந்தக் குழந்தையின் சடலத்தை அந்த முனிவர் முன் இட்டு புலம்பினார்கள். கருணை மிகுந்த முனிவர் நடந்ததை அறிந்து, தன் யோகசக்தியால் குழந்தையின் உடலில் புகுந்தார். அவரே ஹஸ்தாமலகர் ".

Wednesday, June 8, 2022

ஆதிசங்கரர்- 9 (குறுந்தொடர்)

 ஆதிசங்கரர் சரித்திரத்தில் வரும் ஒரு கதைக்குள் வரும் இன்னொரு கதையைப் பார்ப்போம்.

அது ஒரு வேடனைப் பற்றியது.அந்த வேடனுக்கு பகவான் ஸ்ரீஹரி காட்சி அளித்தது பற்றியது.ஒரு வேடன் எப்படி குருவானான் என்பதைப் பற்றியது.

ஒரு கபாலிகன்,க்ரகசன் என்று பெயர்.

கபாலிகர்கள்.."ஈஸ்வரன் எப்படி எலும்பினால் மாலை போட்டுக் கொண்டிருக்கிறாரோ..அப்படி நாமும் எலும்பினால் மாலை போட்டுக் கொள்ள வேண்டும்.அவன் எப்படி மயான சாம்பலை உடம்பெல்லாம் பூசிக்கொண்டுள்ளானோ அப்படியே நாமும் பூசிக் கொள்ள வேண்டும்.மண்டை ஓட்டில்தான் பிச்சை எடுக்க வேண்டும்.அந்தப் பிச்சைக் கூட மாமிசப் பிச்சையாக இருக்க வேண்டும்.அது கிடைக்காவிடில் மயானத்திற்குப் போய் அங்கு வெந்து கொண்டிருக்கும் பிணத்தின் நர மாமிசத்தை அங்கிருப்பவனிடம் யாசிக்க வேண்டும்" எனும் ஆச்சாரங்களைக் கொண்டவர்கள்.

க்ரகசன், சங்கரரை தம் குலத்தின் எதிரியாகப் பார்த்தான்.அப்படியாவது அவரைத் தீர்த்துக் கட்டினால்தான் நம் மதம் பிழைக்கும் என்று எண்ணினான்

சங்கரரோ.. எப்போதும் தன் சீடர்களுடன் சூழப்பட்டவராகவே காணப்பட்டார்.அவரை எப்படிக் கொள்வது? என்று கபாலிகன் யோசித்தான்.

ஒருநாள் சமயம் பார்த்து அவரிடம் வந்தான்."சுவாமி..நான் வெகு நாட்களாக தாந்திரிகமான மார்க்கத்தில் உபாசனை பண்ணீக் கொண்டு வருகிறேன்.பெரிய ஹோமம் ஒன்று செய்ய வேண்டும்.அதற்கு நரபலி கொடுக்க வேண்டும்..அந்த சிரம் ஒரு அரசனுடையதாகவோ..அல்லது ஒரு துறவியினுடையதாகவோ இருக்க வேண்டும்.அரசனிடம் கேட்க முடியாது.ஆகவே நீங்கள் தான் உதவ வேண்டும்.."என வேண்டினான்.

சங்கரருக்கு மிகவும் சந்தோஷம் உண்டானது."என் உடம்பும்..எலும்பும்..ஒன்றுக்கும் உதவாது போகும் என்று எண்ணினேன் .ஆனால் அதற்கும் கூட உபயோகம் இருக்குமென்றால் அதைவிட எனக்கு மகிழ்ச்சி என்னவய இருக்கும்.நாளைக்கு சாயும்காலம் ஆற்றங்கரைக்கு வா..நான் தனியாக இருப்பேன்.சமாதியில் இருக்கையில் என் தலையை எடுத்துக் கொண்டு போ" என்று சொன்னார். 

அவ்வாறே...கபாலிகன் மறூநாள்..சங்கரர் சமாதி நிலையில் இருக்கையில்  ஆற்றங்கரைக்குச் சென்றான்.கத்தியை எடுத்து அவரை வெட்டப் போனான்.திடீரென..சங்கரரின் சீடர் பத்மபாதர் வந்து விட்டார்.

பத்மபாதருக்கு,சங்கரர் கபாலிகனுக்கு அளித்த உறுதி தெரியாது.அதனால் அவர் ஆவேசத்துடன்.."ஹோ''ஹோ.." என்று கத்தியபடியே..கபாலிகன் மீது பாய்ந்து அவன் மார்பைக் கிழித்துப் போட்டு விட்டு சிம்மம் மாதிரி அட்டகாசம் செய்தார்.சமாதி நிலையில் இருந்த சங்கரர் நரசிம்மரின் அட்டகாசத்தைக் கேட்டதும்..கண்ணை விழித்துப் பார்த்தார்.

கபாலிகன் இறந்து கிடந்தான்.பத்மபாதர் கைகளில் ரத்தக்கறை.சங்கரர கண் விழித்ததும் உக்கிரம் தணிந்து..அவர் பாதங்களில் விழுந்தார் சீடர்.

"என்ன இது?" என சங்கரர் கேட்க...தனக்கு எதுவும் தெரியாது என்றார் பத்மபாதர்.

உடன் சங்கரர்.."உனக்கு ஏதாவது நரசிம்ம உபாசனை உண்டா?"ஏன்றார்.

"சின்ன வயதில் ஒருவர் நரசிம்ம மந்திரத்தை உபதேசம் செய்தார்.. அது சித்தியாக வேண்டும் என்றால்..புரச்சரணம் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.எனவே.."அஹோபிலம்" சென்று..அங்கு மலையில் அமர்ந்து ஜெபம் செய்தேன்.அப்போது,ஒருநாள், ஒரு வேடன் வந்து"ஏன் இங்கு அமர்ந்திருக்கிறாய்.இங்கு உனக்கு உணவுகூட கிடைக்காதே..என்றான்..

அதற்கு நான்,"நரசிம்மத்தை..பிரத்யக்ஷமாய்க் காண வேண்டும்..அதற்காக தவம் செய்கிறேன்..என்றேன்.மேலும் அவனிடம் தியான சிலோகத்தில் கூறியப்படி நரசிம்மத்தின் அங்க..அவய ரூபத்தைப் பற்றிக் கூறினேன். 

அதற்கு அவன்.."நீ பொய் சொல்ல மாட்டாய்.நீ சொல்கிற மாதிரியான சிங்கம் இந்த மலையில் உள்ளது என்று நீ சொல்வதால்..நாளை சூரியன் மறைவதற்குள் உன் முன்னால் அதைச் சத்தியமாகக் கொண்டு வந்து காட்டி விடுகிறேன்"என்று சொல்லி விட்டு போய் விட்டான்.

அந்தச் சிங்கத்தைத் தேடி நாள் முழுக்க..அலைய ஆரம்பித்தான்.இரவு முழுவதும் தேடினான்.பசி,தாகம் தெரியாமல்..நரசிம்மம்..நரசிம்மம் என்று ஒரே நினைவாக..சுலோகத்தில் சொன்னபடியான ஒரு உருவததை மனதில் நிறுத்திக் கொண்டு அலைந்தான்.

மறுநாள்..சூரியன் மறையும் நேரமும் வந்தது.கொடுத்த வாக்கைக் காக்க முடியவில்லையே என துக்கம் கொண்டான்.ஒரு கொடியை மரத்தில் கட்டி.."ஏ..சிங்கமே..நீ எப்படியோ என் கண்களில் அகப்படாமல் சுற்றுகிறாய்.அவர் நீ இருக்கின்றாய் என்று சொல்கிறார்.அவர் பொய் சொல்ல மாட்டார்.என் கண்களில் அது அகப்படாது என அவர் சொன்னது சரியாகப் போய் விட்டது.நான் கொடுத்த வாக்கு பொய்யாகப் போக நன ஏன் உயிருடன் இருக்க வேண்டும்..நீதானே என் சத்தியத்தைப் பொய்யாகச் செய்தாய்..உனக்காக என் உயிரை விடுகிறேன்"என்று கூறி..உயிரை விட சுருக்குப் போட்டுக் கொண்டான்.

உடனே..நாசிம்ம மூர்த்தி கர்ஜனையுடன் சிம்ம ரூபமாக..அவன் முன் வரவே..சுருக்குக் கயிறு அறுந்து போயிற்று."சிங்கமே..இப்போதாவது வந்தாயே! வா..உன்னைக் கொண்டு போய் அவரிடம் நிறுத்துகிறேன்" என்று அந்தக் கொடியால் அதைக் கட்டி இழுத்துக் கொண்டு வந்தான்.

சிம்ம் அகர்ஜனைக் கேட்டது.அவன் இழுத்து வருவது தெரிந்தது.கொடியும் தெரிந்தது.ஆனால் சிங்கம் தெரியவில்லை."எனக்கௌ இறைவன் தெரியவில்லையே...உனக்குத் தெரிகிறாரே! நீதான் என் குரு..என காலில் விழுந்து பிரார்தித்தேன்.

"ஒலி வடிவில் இறைவன் எனக்கு அருள் வாக்களித்தார்."உலகத்திற்கே பெரிய உதவி செய்யும் படியான சந்தர்ப்பம் உனக்கு வரும்.அப்போது உன் ரூபமாக நான் வெளிப்படுவேன்"என்று சொன்னார்.அதுதான் எனக்குத் தெரியும் வேறு ஒன்றும் எனக்குத் தெரியவில்லை"என்று பத்மபாதர் சங்கரரிடம் கூறினார்.

சங்கரருக்கு எல்லாம் புரிந்தது.இறைவன் ஸ்ரீஹரி ஒரு வேடனுக்கும்..பின் தம் சீடனுக்கும் அருள் புரிந்ததும்..அதன் வழியாகத் தமக்கு அருள் புரிந்ததையும் உணர்ந்து கொண்டார்.

சங்கரரை..பத்மபாதர் வழியாக இறைவன் காத்தது ஒரு கதை.பத்மபாதருக்கு ஒரு வேடன் மூலம் இறைவன் அருள் புரிந்தது இன்னொரு கதை.