Wednesday, June 8, 2022

ஆதிசங்கரர்- 9 (குறுந்தொடர்)

 ஆதிசங்கரர் சரித்திரத்தில் வரும் ஒரு கதைக்குள் வரும் இன்னொரு கதையைப் பார்ப்போம்.

அது ஒரு வேடனைப் பற்றியது.அந்த வேடனுக்கு பகவான் ஸ்ரீஹரி காட்சி அளித்தது பற்றியது.ஒரு வேடன் எப்படி குருவானான் என்பதைப் பற்றியது.

ஒரு கபாலிகன்,க்ரகசன் என்று பெயர்.

கபாலிகர்கள்.."ஈஸ்வரன் எப்படி எலும்பினால் மாலை போட்டுக் கொண்டிருக்கிறாரோ..அப்படி நாமும் எலும்பினால் மாலை போட்டுக் கொள்ள வேண்டும்.அவன் எப்படி மயான சாம்பலை உடம்பெல்லாம் பூசிக்கொண்டுள்ளானோ அப்படியே நாமும் பூசிக் கொள்ள வேண்டும்.மண்டை ஓட்டில்தான் பிச்சை எடுக்க வேண்டும்.அந்தப் பிச்சைக் கூட மாமிசப் பிச்சையாக இருக்க வேண்டும்.அது கிடைக்காவிடில் மயானத்திற்குப் போய் அங்கு வெந்து கொண்டிருக்கும் பிணத்தின் நர மாமிசத்தை அங்கிருப்பவனிடம் யாசிக்க வேண்டும்" எனும் ஆச்சாரங்களைக் கொண்டவர்கள்.

க்ரகசன், சங்கரரை தம் குலத்தின் எதிரியாகப் பார்த்தான்.அப்படியாவது அவரைத் தீர்த்துக் கட்டினால்தான் நம் மதம் பிழைக்கும் என்று எண்ணினான்

சங்கரரோ.. எப்போதும் தன் சீடர்களுடன் சூழப்பட்டவராகவே காணப்பட்டார்.அவரை எப்படிக் கொள்வது? என்று கபாலிகன் யோசித்தான்.

ஒருநாள் சமயம் பார்த்து அவரிடம் வந்தான்."சுவாமி..நான் வெகு நாட்களாக தாந்திரிகமான மார்க்கத்தில் உபாசனை பண்ணீக் கொண்டு வருகிறேன்.பெரிய ஹோமம் ஒன்று செய்ய வேண்டும்.அதற்கு நரபலி கொடுக்க வேண்டும்..அந்த சிரம் ஒரு அரசனுடையதாகவோ..அல்லது ஒரு துறவியினுடையதாகவோ இருக்க வேண்டும்.அரசனிடம் கேட்க முடியாது.ஆகவே நீங்கள் தான் உதவ வேண்டும்.."என வேண்டினான்.

சங்கரருக்கு மிகவும் சந்தோஷம் உண்டானது."என் உடம்பும்..எலும்பும்..ஒன்றுக்கும் உதவாது போகும் என்று எண்ணினேன் .ஆனால் அதற்கும் கூட உபயோகம் இருக்குமென்றால் அதைவிட எனக்கு மகிழ்ச்சி என்னவய இருக்கும்.நாளைக்கு சாயும்காலம் ஆற்றங்கரைக்கு வா..நான் தனியாக இருப்பேன்.சமாதியில் இருக்கையில் என் தலையை எடுத்துக் கொண்டு போ" என்று சொன்னார். 

அவ்வாறே...கபாலிகன் மறூநாள்..சங்கரர் சமாதி நிலையில் இருக்கையில்  ஆற்றங்கரைக்குச் சென்றான்.கத்தியை எடுத்து அவரை வெட்டப் போனான்.திடீரென..சங்கரரின் சீடர் பத்மபாதர் வந்து விட்டார்.

பத்மபாதருக்கு,சங்கரர் கபாலிகனுக்கு அளித்த உறுதி தெரியாது.அதனால் அவர் ஆவேசத்துடன்.."ஹோ''ஹோ.." என்று கத்தியபடியே..கபாலிகன் மீது பாய்ந்து அவன் மார்பைக் கிழித்துப் போட்டு விட்டு சிம்மம் மாதிரி அட்டகாசம் செய்தார்.சமாதி நிலையில் இருந்த சங்கரர் நரசிம்மரின் அட்டகாசத்தைக் கேட்டதும்..கண்ணை விழித்துப் பார்த்தார்.

கபாலிகன் இறந்து கிடந்தான்.பத்மபாதர் கைகளில் ரத்தக்கறை.சங்கரர கண் விழித்ததும் உக்கிரம் தணிந்து..அவர் பாதங்களில் விழுந்தார் சீடர்.

"என்ன இது?" என சங்கரர் கேட்க...தனக்கு எதுவும் தெரியாது என்றார் பத்மபாதர்.

உடன் சங்கரர்.."உனக்கு ஏதாவது நரசிம்ம உபாசனை உண்டா?"ஏன்றார்.

"சின்ன வயதில் ஒருவர் நரசிம்ம மந்திரத்தை உபதேசம் செய்தார்.. அது சித்தியாக வேண்டும் என்றால்..புரச்சரணம் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.எனவே.."அஹோபிலம்" சென்று..அங்கு மலையில் அமர்ந்து ஜெபம் செய்தேன்.அப்போது,ஒருநாள், ஒரு வேடன் வந்து"ஏன் இங்கு அமர்ந்திருக்கிறாய்.இங்கு உனக்கு உணவுகூட கிடைக்காதே..என்றான்..

அதற்கு நான்,"நரசிம்மத்தை..பிரத்யக்ஷமாய்க் காண வேண்டும்..அதற்காக தவம் செய்கிறேன்..என்றேன்.மேலும் அவனிடம் தியான சிலோகத்தில் கூறியப்படி நரசிம்மத்தின் அங்க..அவய ரூபத்தைப் பற்றிக் கூறினேன். 

அதற்கு அவன்.."நீ பொய் சொல்ல மாட்டாய்.நீ சொல்கிற மாதிரியான சிங்கம் இந்த மலையில் உள்ளது என்று நீ சொல்வதால்..நாளை சூரியன் மறைவதற்குள் உன் முன்னால் அதைச் சத்தியமாகக் கொண்டு வந்து காட்டி விடுகிறேன்"என்று சொல்லி விட்டு போய் விட்டான்.

அந்தச் சிங்கத்தைத் தேடி நாள் முழுக்க..அலைய ஆரம்பித்தான்.இரவு முழுவதும் தேடினான்.பசி,தாகம் தெரியாமல்..நரசிம்மம்..நரசிம்மம் என்று ஒரே நினைவாக..சுலோகத்தில் சொன்னபடியான ஒரு உருவததை மனதில் நிறுத்திக் கொண்டு அலைந்தான்.

மறுநாள்..சூரியன் மறையும் நேரமும் வந்தது.கொடுத்த வாக்கைக் காக்க முடியவில்லையே என துக்கம் கொண்டான்.ஒரு கொடியை மரத்தில் கட்டி.."ஏ..சிங்கமே..நீ எப்படியோ என் கண்களில் அகப்படாமல் சுற்றுகிறாய்.அவர் நீ இருக்கின்றாய் என்று சொல்கிறார்.அவர் பொய் சொல்ல மாட்டார்.என் கண்களில் அது அகப்படாது என அவர் சொன்னது சரியாகப் போய் விட்டது.நான் கொடுத்த வாக்கு பொய்யாகப் போக நன ஏன் உயிருடன் இருக்க வேண்டும்..நீதானே என் சத்தியத்தைப் பொய்யாகச் செய்தாய்..உனக்காக என் உயிரை விடுகிறேன்"என்று கூறி..உயிரை விட சுருக்குப் போட்டுக் கொண்டான்.

உடனே..நாசிம்ம மூர்த்தி கர்ஜனையுடன் சிம்ம ரூபமாக..அவன் முன் வரவே..சுருக்குக் கயிறு அறுந்து போயிற்று."சிங்கமே..இப்போதாவது வந்தாயே! வா..உன்னைக் கொண்டு போய் அவரிடம் நிறுத்துகிறேன்" என்று அந்தக் கொடியால் அதைக் கட்டி இழுத்துக் கொண்டு வந்தான்.

சிம்ம் அகர்ஜனைக் கேட்டது.அவன் இழுத்து வருவது தெரிந்தது.கொடியும் தெரிந்தது.ஆனால் சிங்கம் தெரியவில்லை."எனக்கௌ இறைவன் தெரியவில்லையே...உனக்குத் தெரிகிறாரே! நீதான் என் குரு..என காலில் விழுந்து பிரார்தித்தேன்.

"ஒலி வடிவில் இறைவன் எனக்கு அருள் வாக்களித்தார்."உலகத்திற்கே பெரிய உதவி செய்யும் படியான சந்தர்ப்பம் உனக்கு வரும்.அப்போது உன் ரூபமாக நான் வெளிப்படுவேன்"என்று சொன்னார்.அதுதான் எனக்குத் தெரியும் வேறு ஒன்றும் எனக்குத் தெரியவில்லை"என்று பத்மபாதர் சங்கரரிடம் கூறினார்.

சங்கரருக்கு எல்லாம் புரிந்தது.இறைவன் ஸ்ரீஹரி ஒரு வேடனுக்கும்..பின் தம் சீடனுக்கும் அருள் புரிந்ததும்..அதன் வழியாகத் தமக்கு அருள் புரிந்ததையும் உணர்ந்து கொண்டார்.

சங்கரரை..பத்மபாதர் வழியாக இறைவன் காத்தது ஒரு கதை.பத்மபாதருக்கு ஒரு வேடன் மூலம் இறைவன் அருள் புரிந்தது இன்னொரு கதை. 

No comments:

Post a Comment