Sunday, June 12, 2022

ஆதிசங்கரர்- 11(குறுந்தொடர்)

 

தவளை, நாகப்பாம்பு நட்பு

இதன் பின் சங்கரர் துங்கபத்திரை நதிக்கரையில் உள்ள சிருங்கேரி என்னும் இடத்திற்கு வந்தார்அங்கு மாமுனிவர் ரிஷ்யசிருங்கர் ஆஸ்ரமம் இருந்ததுஅங்கு ஒரு தவளை கர்பமாக இருந்ததுவெயிலின் வெப்பம் தாங்காமல் தவித்த தவளைக்கு ஒரு நாகப் பாம்பு தன் தலையால் குடை பிடித்தது

இதை பார்த்த சங்கரர் வியந்தார்இயற்கையில் எதிரிகளான பாம்பும் தவளையும் சேர்ந்து இருப்பதை கண்ட சங்கரர் இந்த இடம் நிச்சயமாக ஒரு சக்திமிகுந்த இடமாகத்தான் இருக்க வேண்டும் என எண்ணினார்.

எனவே இந்த இடத்தில் சாரதாபரமேஸ்வரிக்கு ஒரு ஆலயம் நிறுவ முடிவு செய்தார்முன்பு உபயபாரதியிடம் வைத்த வேண்டுகோள்படி அங்கு ஒரு ஆலயத்தை கட்டி  பிரம்மஸ்வரூபிணியாக சாரதாபரமேஸ்வரியை பிரதிஷ்டை செய்தார்.

No comments:

Post a Comment