Thursday, June 16, 2022

ஆதிசங்கரர்- 12 (குறுந்தொடர்)


 


சங்கரர்..கர்நாடகாவில்..துங்கபத்ரா நதிக்கரையில் இருந்த சிருங்கேரிக்கு வந்து சேர்ந்தார்.

தசரதர் புத்ரபாக்யம் வேண்டி செய்த புத்ரகாமேஷ்டி யாகத்தை நடத்தி வைத்த ரிஷ்யசிருங்க மாமுனிவரின் ஆசிரமம் அங்கு இருந்தது.

அங்கு நிறைமாத கர்ப்பிணியான ஒரு தவளை வெயில் தவிக்கும் போது..ஒரு நாகப்பாம்பு படமெடுத்து தன் தலையால் குடைபிடித்து அத்தவளையைக் காப்பாற்றிய காட்சியை சங்கரர் கண்டார்.

இயல்பாகவே விரோதிகளான இவை இரண்டும் ஒன்றாக இருப்பதைக் கண்ட சங்கரருக்கு அந்த இடம் மிகுந்த சக்தி வாய்ந்த இடமாகத் தோன்றியது.

முன் உபயபாரதியிடம் ,தான் விரும்பும் இடத்தில் அமர்ந்து அருள்பாலிக்க வேண்டும் என சொல்லியிருந்தது நினைவிற்கு வர..அதன்படியே அவளுக்கென ஒரு ஆலயத்தை அமைத்து பிரம்மஸ்வரூபிணியாக சாரதாபரமேஸ்வரியை பிரதிஷ்டை செய்தார்.

No comments:

Post a Comment