Friday, December 13, 2024

நாராயணீயம்

 நாராயணீயம் தினம்: டிசம்பர் 13, 2024

.............................
*நாராயணீயம்!*
*திருப்பூர் கிருஷ்ணன்*
.............................
*ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அருமருந்தாகத் திகழ்கிறது பக்திக் காவியமான நாராயணீயம். உடல்நலன் குன்றியவர்கள் நாராயணீயத்தைப் பாராயணம் செய்தால் மீண்டும் நல்ல உடல் நலன் பெறமுடியும் என்பது ஆன்மிக அன்பர்களின் திட நம்பிக்கை.
கடந்த காலத்தில் ஏராளமான அன்பர்கள் நாராயணீயத்தைப் பாராயணம் செய்து முழுமையான உடல் நலன் பெற்றிருக்கிறார்கள்.
சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்ட இந்நூல் பலரால் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உரையாசிரியர் அண்ணா அவர்களின் அற்புதமான விளக்கவுரையுடன் ராமகிருஷ்ணமடம் இந்நூலைப் பதிப்பித்துள்ளது.
இந்நூலுக்கு நாராயணீயம் எனப் பெயர் வந்ததற்கான காரணங்களாக இரண்டு விஷயங்களைச் சொல்கிறார்கள்.
ஒன்று, கடவுள் நாராயணனைப் பற்றியும் அவரது லீலைகளைப் பற்றியும் பேசுகிறது இந்நூல். அதனால் இப்பெயர்.
தவிர இந்த நூலை எழுதிய பக்திக் கவிஞரின் பெயர் நாராயண பட்டதிரி என்பது. நாராயண பட்டதிரியால் எழுதப்பட்டதாலும் இது நராயணீயம் என நூலாசிரியர் பெயரால் அழைக்கப்படுகிறது.
பாகவதத்தில் சொல்லப்பட்ட கண்ணன் கதையை 1036 அருமையான சுலோகங்களில் சுவாரஸ்யமாகச் சொல்கிறது நாராயணீயம்.
திருமாலான நாராயணன்தானே கண்ணனாக அவதரித்தார்? அவ்வகையில் நாராயணனைப் பற்றியும் அவரது தசாவதாரத்தைப் பற்றியும் கூட இந்நூல் பேசுகிறது.
ராமாவதாரத்தைப் பற்றிப் பேசும்போது முழு ராமாயணக் கதையையும் அழகிய சுலோகங்களில் சொல்லிச் செல்கிறார் நாராயண பட்டதிரி.
தவிர மத்ஸ்யாவதாரம், வராகவதாரம், நரசிம்மாவதாரம், பரசுராம அவதாரம், வாமனாவதாரம் என எல்லா அவதாரங்களின் கதையும் இந்நூலில் உண்டு.
இந்நூலில் இடம்பெற்றுள்ள அஜாமிளன் கதை, கஜேந்திர மோட்சக் கதை, பாற்கடலிலிருந்து அமிர்தம் கடையப்பட்ட கதை போன்றவை பக்தர்களின் இதயங்களைக் கொள்ளை கொள்ளக் கூடியவை.
பதிகம் என்று பத்துப் பாடல்கள் அடங்கிய தொகுப்பைத் தமிழில் சொல்கிறோம். இதைப்போல் தசகம் என்பது பத்து சம்ஸ்க்ருதச் செய்யுள்களின் தொகுப்பு. நாராயணீயம் சுமார் நூறு தசகங்களை உடையது.
இது பாடப்பட்ட திருத்தலம் கேரளத்தில் உள்ள குருவாயூர். அந்தக் கோயிலிலேயே குருவாயூரப்பன் சன்னிதி முன் அமர்ந்து இந்நூலை இயற்றினார் நாராயண பட்டதிரி என்பதுதான் இந்நூலின் விசேஷம்.
இந்நூல் புதுமையான ஓர் உத்தியில் புனையப்பட்டுள்ளது.
குருவாயூரப்பனை அழைத்து `ஏ குருவாயூரப்பா! நீ கோவர்த்தன கிரியைத் தூக்கினாயே? காளிங்கன் என்ற பாம்பின் மேல் கால்வைத்து நடனமாடினாயே? கம்சனை வதம் செய்தாயே?` என்றெல்லாம் கண்ணனின் லீலைகளைக் கண்ணனிடமே எடுத்துச் சொல்வது போன்ற முறையில் இது புனையப்பட்டுள்ளது.
கண்ணனை நேரில் கண்டு கண்ணனிடம் தன் எண்ணங்களைச் சொல்லித் துதித்திருக்கிறார் நூலாசிரியர் என்பதே உண்மை.
இக்காவியத்தை எழுதிய நாராயண பட்டதிரி மேல்புத்தூரைச் சேர்ந்தவர். பாரதப் புழை என்ற ஆற்றின் வடக்குக் கரையில் திருநாவா எனற ஷேத்திரத்திற்கு அருகில் மேல்புத்தூர் இல்லம் உள்ளது.
நாராயண பட்டதிரியின் தகப்பனார் பெயர் மாத்ருதத்தர். அவர் சம்ஸ்க்ருதத்தைக் கசடறக் கற்ற பண்டிதர்.
பட்டதிரி தொடக்கத்தில் தந்தையிடமே கல்வி கற்றார். மாதவாச்சாரியார் என்ற குருவிடம் ரிக்வேதத்தையும் தாமோதராச்சாரியார் என்ற குருவிடம் தர்க்க சாஸ்திரத்தையும் கற்றார்.
பின்னர் அச்யுத பிட்சாரோடி என்பவரிடம் இலக்கணப் பாடம் பயின்றார். இவ்விதம் நாராயண பட்டதிரி தம் பதினாறாம் வயதிலேயே பிற அறிஞர்கள் பார்த்து வியக்குமளவு மாபெரும் பண்டிதராக உருவானார். சரஸ்வதி கடாட்சம் அவருக்கு இயற்கையிலேயே அமைந்திருந்தது.
இப்படியான காலகட்டத்தில் அவருடைய இலக்கண குருவான அச்யுதப் பிட்சாரோடி கடும் வாதநோயால் பீடிக்கப் பட்டார். நிற்கவும் நடக்கவும் முடியாத உடல் உபாதைகளுக்கு அவர் ஆட்பட்டார்.
தமக்கு வியாகரணத்தைக் கற்பித்த தம் குரு படும் உடல் அவஸ்தைகளைப் பார்த்து நாராயண பட்டதிரியின் உள்ளம் கசிந்து உருகியது.
தம் குருவுக்கு ஆரோக்கியத்தை மீட்டுத் தரவேண்டும் என்றும் அதுவே அவருக்குத் தாம் தரும் சரியான குரு தட்சிணையாக இருக்கும் என்றும் தீவிர குருபக்தி கொண்ட அவர் மனம் சிந்தித்தது.
எனவே தமது யோக பலத்தால் குருவின் வியாதியைத் தாம் வாங்கிக் கொண்டு குருவைப் பூரண உடல் நலம் பெறச் செய்ய முடிவு செய்தார். அதன்படியே ஒருநாள் குருவின் நோய் முழுவதையும் தாம் வாங்கிக் கொண்டார்.
இப்போது குரு முழு ஆரோக்கியம் அடைந்தார். ஆனால் குருவின் நோயைத் தாம் பெற்றுக் கொண்டதால் அங்கங்கள் முடங்கியவரானார் நாராயண பட்டதிரி.
இனித் தாம் எப்படி நோயிலிருந்து விடுபடுவது எனச் சிந்தித்தது அவர் உள்ளம். குருவாயூருக்குப் போய் குருவாயூரப்பன் சந்நிதியில் தவம் செய்ய நிச்சயித்தார்.
நடக்கவியலாத தம்மை குருவாயூருக்கு எடுத்துப் போகுமாறு அன்பர்களிடம் வேண்டினார். அன்பர்கள் அவர் வேண்டியபடியே குருவாயூரப்பன் சன்னிதியில் அவரைக் கொண்டுசென்று அமர வைத்தார்கள்.
(இன்றும் குருவாயூரப்பன் ஆலயத்தில் குருவாயூரப்பன் சன்னிதியின் உள்ளே செல்லும் வழியில் குருவாயூரப்பனுக்கு வலது புறத்தில் `மேல்புத்தூர் நாராயண பட்டதிரி அமர்ந்து ஸ்ரீமந் நாராயணீயம் எழுதிய இடம்` பித்தளை சாசனத்தில் குறிப்பிடப்பட்டு அடையாளப் படுத்தப் பட்டுள்ளது.)
குருவாயூரப்பன் சன்னிதிக்கு நேரே அமர்ந்து நாள்தோறும் பத்து சுலோகம் வீதம் இயற்றிப் பாடலானார் நாராயண பட்டதிரி. அவ்விதம் நூறு நாட்களில் நாராயணீயம் முழுவதையும் பாடி முடித்தார்.
27.11.1587 அன்று அவர் நாராயணீய காவியத்தை நிறைவு செய்ததாகச் சொல்லப்படுகிறது.
என்ன ஆச்சரியம்! கடவுளின் கருணையிருந்தால் எதுதான் நடக்காது? குருவாயூரப்பனின் திருவருளால் அவர் தம் வாத நோயிலிருந்து முழுமையாக விடுபட்டார்.
அவர் நாராயணீயத்தைப் பாடி முடித்தபோது அவர் வயது இருபத்தேழு தான். பிறகும் அவர் நீண்டநாள் ஆரோக்கியமாக வாழ்ந்து இறைத்தொண்டு புரிந்து வந்தார்.
அவர் பற்பல சாஸ்திரங்களில் பெரும் புலமை பெற்ற விற்பன்னராக 106 வயதுவரை வாழ்ந்தார் என்று சொல்கிறார்கள்.
பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டத் தாம் எழுதிய நாராயணீய சுலோகங்களில் இப்போதும் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
குருவாயூரப்பனாகிய திருமாலின் வரலாற்றைச் சொல்வதோடு கூடவே, திருமால் அடியவர்களாக வாழ்ந்த பலரது வரலாறுகளையும் இடையிடையே சொல்கிறார் பட்டதிரி.
அவ்வகையில் பிரகலாதனின் வரலாறு இதில் பேசப்படுகிறது.
பிரகலாதனுக்குக் காட்சி தந்த திருமால் தனக்குக் காட்சி தரவில்லையே என அதை எழுதும்போது ஏங்கியது பட்டதிரியின் உள்ளம்.
பிரகலாதன்மேல் அவ்வளவு பிரியம் வைத்த குருவாயூரப்பன் தன்மேல் ஏன் கனிவு காட்டவில்லை என வருந்திய அவர், தாபத்தோடு `பிரகலாத ப்ரியா` என குருவாயூரப்பனை உள்ளம் உருகி அழைத்தார்.
அப்போது சன்னிதியின் உள்ளிருந்து `நான் பிரகலாத ப்ரியன் மட்டுமல்ல, பக்த ப்ரியன்!` என அசரீரி எழுந்தது.
சிலிர்ப்படைந்த பட்டதிரி, கண்ணன் கையிலுள்ள புல்லாங்குழலை விட இனிமையான அந்த அசரீரிக் குரலைக் கேட்டுத் தன் விழிகளைத் துடைத்துக் கொண்டார். தொடர்ந்து அளவற்ற நம்பிக்கையோடு நாராயணீயத்தை எழுதலானார்.
பக்திச் சிறப்பு மட்டுமல்ல, இலக்கியச் சிறப்பும் உடையது இக்காவியம். பல அழகிய கற்பனைகள் இந்தக் காவியமெங்கும் காணப்படுகின்றன.
பொதுவாக பணம் யாரிடமும் அதிக நாள் தங்குவதில்லை.
அதைப் பற்றிக் கூறும்போது லட்சுமிதேவி எங்கும் அதிக நாள் தங்கமாட்டாள் என்றாலும், தன் கணவரான குருவாயூரப்பனின் பக்தர்களிடம் கணவனைப் பற்றிய பேச்சுக்களை அதிக நேரம் கேட்டு மகிழும் ஆசையில் கூடுதலாகத் தங்குவாள் என்கிறார் பட்டதிரி!
கேசாதிபாத வர்ணனையாக குருவாயூரப்பனைத் தலைமுதல் கால்வரை வர்ணிக்கும் பகுதியில் பக்தியின் முழுமையைக் காண முடியும்.
கண்ணனை நேரில் தரிசித்தாலன்றி அத்தகைய கவிதைகளை எழுத வாய்ப்பில்லை என்பது படிக்கும்போது நமக்குப் புரியும்.
1587இல் எழுதப்பட்ட இந்நூல், அச்சு வடிவில் 1851ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இரயிம்மன் தம்பி என்பவர் இந்நூலை அச்சுவடிவில் வெளியிட்டார்.
இப்போது இந்நூலின் ஏராளமான அச்சு வடிவங்கள் வெளிவந்துவிட்டன. இந்நூலுக்குப் பல இந்திய மொழிகளில் உரை எழுதப்பட்டுப் பல மொழிகளில் இது வெளிவந்துள்ளது.
இந்த அழகிய பக்திக் காவியத்தைத் தமிழ் மக்களிடம் பிரபலப்படுத்தியவர்களில் முக்கியமானவர் காலஞ்சென்ற பிரம்மஸ்ரீ அனந்தராம தீட்சிதர்.
அவர் பற்பல இடங்களில் நாராயணீய காவியத்தைப் பற்றிச் சொற்பொழிவு செய்து தமிழ் மக்கள் அதன் பெருமையை உணர்ந்து பலனடையுமாறு செய்தார்.
தற்போது தாமல் ராமகிருஷ்ணன் போன்ற சொற்பொழிவாளர்கள் இந்தக் காவியத்தின் பெருமை பற்றிப் பல இடங்களில் எடுத்துக் கூறி வருகிறார்கள்.
பலச்ருதி என்பது ஒரு பக்தி நூலைப் பாராயணம் செய்வதால் ஏற்படும் பலன்களைப் பற்றிச் சொல்லக் கூடியது. நாராயணீயத்தின் பலச்ருதி என்பது உடல் ஆரோக்கியம்தான். நம் உடல் நலனை வலுப்படுத்தக் கூடிய மந்திர சக்தி இந்தக் காவியத்தில் நிறைந்துள்ளது.
நாராயணீயத்தின் நூறு தசகங்களில் ஒவ்வொரு தசகத்தின் இறுதியாக அமையும் பாடலில் `என் நோயிலிருந்து என்னைக் காத்தருள்!` என்ற பொருளுடைய வாக்கியம் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.
ஆன்மிக அன்பர்கள் நாராயணீயத்தைப் பாராயணம் செய்து தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.
(நன்றி: மாலைமலர்)

Monday, July 11, 2022

ஆதிசங்கரர்- 18

 சங்கரர் பாரதத்தில் நான்கு திசைகளிலும் நான்கு மடங்களை நிறுவினார்.


பத்மபாதரை பீடாதிபதியாகக் கொண்டு கிழக்கே பூரி ஜெகன்னாத்தில் ரிக் வேத ப்ரதானமாக கோவர்த்தன மடத்தை நிறுவினார்.


சுரேஷ்வராச்சாரியை பீடாதிபதியாகக் கொண்டு தெற்கே யஜூர் வேத ப்ரதானமாக சிருங்கேரியில் மடத்தை நிறுவினார்.


ஹஸ்தமாலாகாவை பீடாதிபதியாகக் கொண்டு மேற்கே சாமவேத ப்ரதானமாக துவாரகாவில் மடத்தை நிறுவினார்.


தோடகாச்சாரியாரை பீடாதிபதியாகக் கொண்டு வடக்கே அதர்வண வேத ப்ரதானமாகபத்ரியில் ஜோதிர் மடத்தை நிறூவினார்.


சந்திரமௌலீஸ்வர ஸ்படிக லிங்கம் மற்றும் ரத்னசர்வ கணபதி விக்ரகத்தையும் சுரேஸ்வரிடம் கொடுத்து பூஜித்து வருமாறு கூறினார்.

இந்த பூஜையை இன்றும் சிருங்கேறி மடாதிபதிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

சங்கரர் ஏற்றி வைத்த ஜோதி இன்றும் சிருங்கேரியில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.  

Friday, July 8, 2022

ஆதிசங்கரர் - 17 (தொடர்)

 சர்வக்ஞபீடத்தில் அமர்தல்

------------------------------------

சங்கரர் இமயமலையில் கங்கைக் கரையில் தன் சீடர்களூடன் தங்கி வந்தார்.

அப்போது காஷ்மீரத்தில் அன்னை சாரதா ட்ஹேவியின் ஆலயம் உள்ளது.அம்கு ஒரு சர்வக்ஞபீடம் இருக்கிறது.இதில் எல்லாம் அறிந்த சர்வக்ஞர் மட்டுமே அமர முடியும்.

அதன் நான்கு பக்கங்களிலும் நான்கு வாசல்கள் உண்டு.வடக்கு,மேற்கு,கிழக்கு ஆகிய மூன்று திசைகளிலிருந்து அறிஞர்கள் வந்த அந்தந்த கதவுகள் திறந்தபடி உள்ளன.

ஆனால்,தெற்கு பக்கத்திலிருந்து ஒருவரும் வராததால் தெற்கு வாசல் மட்டும் மூடப்பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டார் சங்கரர்.

உடன், தென் திசைக்குச் சென்று ..தென்திசை கதவு வழியே அக்கோயிலுக்குள் நுழைய வேண்டும் என்று சென்றார்.அவர் தெற்கு வாயிலை அடைந்தார்.அங்கு பல மதங்களைச் சேர்ந்த அறிஞர்களை தமது வாதத் திறமையால் வென்றார்.தென் திசை கதவு திறக்கப்பட்டது.

சங்கரர்,பத்மபாதருடன் உள்ளே நுழைந்தார்.

அங்கிருந்த சிம்மாசனத்தில் அமரப் போனார்.

அப்பொழுது..சரஸ்வதி தேவியின் குரல் கேட்டது.இந்த சிம்மாசனத்தில் அமர சர்வக்ஞராய் இருந்தால் மட்டும் போதாது..சர்வசுத்தி உடையவராகவும் இருக்க வேண்டும் என்றாள் சரஸ்வதி.

அதற்கு சங்கரர்,பிறந்ததிலிருந்து தான் ஒரு பாவத்தையும் அறியேன்.நான் சர்வசுத்தன் என்றார்.

இதைக் கேட்டு மகிழ்ந்த சரஸ்வதி..சங்கரரை சர்வக்ஞபீடத்தில் அமரச் சொன்னாள்.

அதுமுதல் சங்கரர் ஜகத்குரு என அழைக்கப்பட்டார்.

Tuesday, June 28, 2022

ஆதிசங்கரர்- 16 (தொடர்)


 


தன் சீடர்களுடன் பல தலங்களுக்கு யாத்திரை செல்ல முடிவெடுத்தார் சங்கரர்.

ராமேஷ்வரம் சென்று வணங்கிய பின்னர் காஞ்சிபுரத்தை வந்து அடைந்தார்.அங்கு சாக்தர்கள் தந்திர வழிமுறைகளைப் பின் பற்றி வந்தனர்.அதை மாற்ற எண்ணிய சங்கரர்..சாக்கர்களை வாதத்தில் வென்று காமாட்சி அம்மனுக்கு ஸ்ரீசக்ரத்தை பிரதிஷ்டை செய்து வைத்தார்.ஸ்ரீசக்ரம் வைத்த பின் அம்பாளின் உக்ரம் குறைந்து சாந்த ஸ்வரூபியாய் அருள் பாலித்தார்.தாந்திரிக பூஜை முறையை வைதிக பூஜை முறைக்கு மாற்றினார்.

பின் காஞ்சியில் இருந்து புறப்பட்டு திருப்பதி சென்றார்.அங்கு வெங்கடாசலபதியை தரிசனம் செய்தார்.அங்கிருந்து கர்நாடகம் சென்று சங்கரர் அங்கு கபாலிகர்களையும்,பாஷாண்டகர்களையும் வாதம் செய்து வெற்றி கொண்டார்.அங்கிருந்து கோகர்ணம் சென்று சைவ குருவான திருநீலகண்டரை வென்றார்.அவரை அத்வைத சித்தாந்ததை ஏற்க வைத்தார்.பிறகு துவாரகா வந்த சங்கரர் வைஷ்ணவர்களை வென்று உஜ்ஜெயினி சென்றார். 

உஜ்ஜெயினில் பட்டபாஸ்கர் என்பவரை வென்றார்.இதனால் ஜைனர்கள் எதிர்த்தும்..அவர்களால் சங்கரரை வாதத்தில் வெல்ல இயலவில்லை.

பிறகு சங்கரர்,நவகுப்தர் எனும் சாக்கரை வென்றார்.இதனால் கோபமடைந்த நவகுப்தர், சங்கரருக்கு பகந்தரம் எனும் நோய் வரும்படி செய்தார்.ஆனால்..பத்மபாதரின் மந்திர சக்தி மூலம் அந்நோய் சங்கரரை நீங்கி நவகுப்தரையே சென்று தாக்கிய து.

பின், உஜ்ஜெயினிலிருந்து புறப்பட்டு இமயமலையை அடைந்தார் சங்கரர்.அங்கு தனது குருவான கோவிந்த பகவத்பாதரின் குருவான கௌடபாதரை சந்தித்து ஆசி பெற்றார்.

பின், தன் சீடர்களுடன்  சில காலம் கங்கை நதிக்கரையில் தங்கினார்.

Thursday, June 23, 2022

ஆதிசங்கரர்-15(தொடர்)

 ஆதிசங்கரரின் சீடர் பத்மபாதர் "சாரீரக பாஷ்யத்திற்கு" விளக்க உரை எழுதினார்.அதில் கொஞ்சம் பாகம் ஆதிசங்கரருக்கு படித்துக் காட்டினார்.பிறகு அவருக்கு தீர்த்தாடனத்தில் ஆர்வம் ஏற்பட ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டார்.தனது சாரீரக பாஷ்யத்தையும் உடன் எடுத்துச் சென்றார்.

போகும் வழியில் ஜம்புகேஷ்வரத்தில்..அவரது மாமாவின் இல்லம் இருந்த்து.அங்கேபுத்தகத்தை வைத்து விட்டு ,திரும்பி வருகையில் எடுத்துக் கொள்ளலாம் என்று ராமேஸ்வரம் போனார்.

இவர் இல்லாதபோது..அவரது மாமா இந்நூலை படித்துப் பார்த்தார்."இந்நூல் நம் சித்தாந்தத்தை அழித்துவிடும் போல இருக்கிறதே" என நினைத்தார்."புத்தகத்தை அழித்துவிட்டால் போச்சு.மறுபடி இதேபோல எழுதுவது கடினம் "என்று எண்ணினார்.

அவருக்கு இரண்டு வீடுகள் இருந்தன.ஒரு வீடு சிதைந்திருந்தது.அதில் தேவையற்ற சாமான்களைப் போட்டு வைத்திருந்தார்.அந்தப் புத்தகத்தை அங்கு வைத்துவிட்டு..அந்த வீட்டிற்கு தீ வைத்து விட்டார்.

பத்மபாதர்,ராமேஸ்வரத்திலிருந்து வந்ததும்..விபரீதம் நடந்து விட்டதாக வேஷம் போட்டார்.

ஆதிசங்கரரிடம் வந்த பத்மபாதர்..நடந்த விஷயங்களைக் கூறினார்.

"நீ முதல் அத்தியாயம் நான்கு பாதமும், இரண்டாம் அத்தியாயம் முதல் பாதமும் என்னிடம் வாசித்துக் காட்டினாய் அல்லவா?..அதைத் திரும்பச் சொல்கிறேன்.எழுதிக் கொள்.அதவது உலகிற்கு கிடைக்கட்டும்"என்று ..தான் ஒரே ஒருமுறை கேட்ட்தை கடகடவென சொன்னார் சங்கரர்.

முதல் ஐந்து பாதங்களுக்கு விரிவுரை ஆனதால் இந்நூலிற்கு "பஞ்ச பாதிகா"என்று பெயர்.

 

 

Tuesday, June 21, 2022

ஆதிசங்கரர்- 14 (தொடர்)


 

சங்கரர் தன் சீடர்களுடன் சிருங்கேரியில் 12 ஆண்டுகள் தங்கியிருந்தார்.அப்போது சீடர்கள் பல நூல்களையும், சங்கரர் எழுதிய நூல்களுக்கு விளக்கவுரையும் எழுதினார்கள்.

இவ்வாறு இருக்கையில் தன் தாயின் இறுதி நாட்கள் நெருங்குவதை தன் ஞானதிருஷ்டியால் சங்கரர் உணர்ந்தார்.

தன் சீடர்களிடம் தாயாரின் நிலையைப் பற்றிக் கூறி..காலடி வந்தார்.

மகனைக் கண்டு தாய் மகிழ்ந்தாள்.

சங்கரர்,மிகவும் அன்புடன்.."அம்மா..கவலைப்படாதே...உனக்கு என்ன ஆசை..என்று கூறு.." என்றார்.

தன்னை சிவலோகத்துக்கு அனுப்ப வேண்டும்..என தாயார் கூற..சங்கரரும் "சிவபுஜங்கம்" எனும் ஸ்டோத்திரத்தால் பரமசிவனைத் துதித்தார்.சிவகணங்கள் உடன் அங்கு சூலத்தை ஏன்றியபடி தோன்றினர்.

இவைகளினால் பயந்த தன் தாயாரின் வேண்டுகோளுக்கு இணங்க.மகாவிஷ்ணுவை வேண்டி ஒரு பாடல் பாடினார் சங்கரர்.

உடன் விஷ்ணுவின் தூதர்கள் வந்து..தாயாரை விமானத்தில் ஏற்றிக் கொண்டு வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றனர்.

சங்கரர் தாயாருக்கு இறுதிச் சடங்குகளை செய்யத் தொடங்கினார்.

சங்கரரின் உறவினர்களும்,ஊராரும் சன்னியாசியான அவர் நெருப்பு சம்பந்தப்பட்ட சடங்குகளில் ஈடுபடக் கூடாது என்றனர்.சங்கரர் மனம் தளராமல் தன் தாய்க்குக் கொடுத்திருந்த சத்தியத்தைப் பற்றிக் கூறினார்.அதை அவர்கள் கேட்பதாக இல்லை.

உடன் சங்கரர்  உலக சம்பிரதாயத்தை மீறாமல்..அதேநேரம் ..தாய்க்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வகையில்..தன் வீட்டுக்கு அருகில் கட்டைகளை அடுக்கி..தனது யோக சக்தியால் வலது கையிலிருந்து அக்கினியை உண்டாக்கி அதில் தாயாரின் தகனக் கிரியைகளை செய்து முடித்தார்.


(தொடரும்) 

Sunday, June 19, 2022

ஆதிசங்கரர்-13(தொடர்)

 



தோடகாஷ்டகம் !
------------------
ஆதிசங்கரர் சிருங்கேரியில் இருந்த போது காலநாத கிரி என்ற சிறுவன் அவரை வணங்கினான். பெரிய ஞானத் தேடலோ ஆன்மீக விழைவுகளோ இல்லாது இட்டபணி செய்து கொண்டு இன்பமாக இருந்து வந்தான் கிரி. ஆனால் சங்கரர் பெரிய ஞானி என்பதும் அவருக்குத் தொண்டு செய்வது நல்லது என்பதும் அவனது மனதில் ஆழப்பதிந்து இருந்தது. ஒரு நாள் தன் மூன்று சீடர்களுடன் வேதாந்த வகுப்பிற்கு அமர்ந்தார். கிரி துணிகளைத் துவைத்து உலர்த்திக் கொண்டிருந்தான். பாடத்தைத் தொடங்காது இருந்த குருவிடம் சீடர்கள் ஏனென்று கேட்க கிரி வரட்டும் என்றார் சங்கரர்.
அருகில் அமர்ந்திருந்த பத்மபாதர் ஒரு கல்லைச் சுட்டிகாட்டி அதற்குப் பாடம் சொல்வதும் கிரிக்குப் பாடம் சொல்வதும் ஒன்றே என்றார். சற்றே நகைத்த பகவத்பாதர் கிரியை அழைத்து ஆசீர்வதித்து இதுவரை நீ கற்றதைச் சொல் என்றார். அப்போது கிரி பாடிய எட்டுச் செய்யுட்கள் (அஷ்டகம்) குருவின் மகிமையை வியந்தோதுவதாக இருந்தது. சங்கர தேசிகாஷ்டகம் என்று அதற்குத் தலைப்பிட்டார் கிரி. அப்போதே கிரியை தோடகாச்சாரியார் என்ற சந்நியாசப் பெயருடன் தன் சீடர்களில் ஒருவராக ஏற்றார் பகவத் பாதர். அவர் பாடிய சங்கர தேசிகாஷ்டகம் அவரது பெயரிலேயே தோடகாஷ்டகம் என்று விளங்கட்டும் என்றும் ஆதிசங்கரர் ஆசீர்வதித்தார்.

ஸ்ரீ ஸ்ரீ தோடகாச்சாரியார் பாடிய தோடகாஷ்டகமும் அதன் அர்த்தமும்.
விதிதாகில சாஸ்த்ர ஸூதா ஜலதே
மஹிதோபநிஷத் கதிதார்த்தநிதே!
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

புகழ்பெற்ற கடல் போன்ற அனைத்து சாஸ்திரங்களையும் அறிந்தவரும், உபநிஷத்துக்களில் கூறி இருக்கும் தத்துவங்களை உணர்ந்து அதில் உறைந்தவரும் ஆன அந்த பரமேஸ்வரனுக்கு நிகரான சங்கர குருவே, உங்கள் பாதங்களில் என்னுடைய ஹ்ருதயத்தைச் சமர்ப்பிக்கிறேன். தாங்களே எனக்கு குரு, வழிகாட்டி (தேசிக என்பதற்கு இங்கே வழிகாட்டி என்ற பொருள்)

கருணா வருணாலய பாலய மாம்
பவஸாகர துக்க விதூன ஹ்ருதம்
ரசயாகிலதர்சன தத்வவிதம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

குருவே, எனக்கு எதுவுமே தெரியாதே! நான் நிர்மூடன்! எந்தக் கலையும் என்னால் அறியப் படவில்லை. ஆகையால் என்னால் பிறருக்குப்பயன் தரும் எந்த வித்தையையும் கற்பித்துப் பொருள் ஈட்டித் தங்களுக்கு வேண்டியவற்றைச் செய்து குரு தக்ஷிணையும் தர இயலவில்லை. இப்படி எதுவுமே இல்லாத ஏழையான எனக்குத் தாங்கள் தங்கள் சுபாவமான கருணையாலும், அன்பாலுமே அனைத்தையும் கற்பித்துக் காட்ட வேண்டும். ஹே சங்கரகுருவே, தங்கள் திருவடியே எனக்குச் சரணம்! கருணை நிறைந்தவரே, தங்கள் கருணையாகிய கடலால் இந்தப் பிறப்பு இறப்பு என்னும் சாகரத்தில் மூழ்கித் தவிக்கும் என்னைக் காத்துக் கரை சேருங்கள்.
என்னை ஞானவானாக ஆக்குங்கள். சங்கர குருவே தாங்களே எனக்குக் கதி! தங்களைச் சரணடைகின்றேன்.

பவதா ஜனதா ஸுகிதா பவிதா
நிஜபோதவிசாரண சாருமதே
கலயேச்வர ஜீவ விவேகவிதம்
பவ சங்கர தேசிகமே சரணம்!!
தாங்களே பரப்பிரும்மம். அதனால் தாங்கள் தெளிந்த ஞானத்தை உடையவராய் இருக்கிறீர்கள். தங்கள் ஞான போதனை எனக்கு மட்டுமின்றி உலகத்து மக்களுக்கும் பயன்பட்டு அதனால் க்ஷேமம் உண்டாகும். என்னை விவேகம் உள்ளவனாக என்னை ஜீவனை அறிந்தவனாக ஈஸ்வரனை அறிந்தவனாக மாற்றுங்கள். ஹே, சங்கர குருவே, தாங்கள் தான் எனக்குச் சரணம்!

பவ ஏவ பவானிதி மே நிதராம்
ஸமஜாயத சேதஸி கெளதுகிதா
மம வாரய மோஹமஹாஜலதிம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!
தாங்களே அந்த சாட்சாத் பரமேஸ்வரன். என்னுடைய சித்தம் பகுத்து அறிந்து காமத்தை விலக்கும் அறிவை நீங்களே எனக்குத் தரவேண்டும். என்னுடைய விருப்பமே தங்களால் எனக்கு ஞானம் ஏற்படவேண்டும் என்பதே! ஹே சங்கர குருவே சரணம்!

ஸுக்ருதே (அ)திக்ருதே பஹுதா பவதோ
பவிதா ஸமதர்சன லாலஸதா
அதிதீனமிமம் பரிபாலய மாம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!
தங்களின் எங்கும் பிரும்மமே என்ற கொள்கையே எத்தனைவிதமான புண்ணியங்களைச் செய்ததால் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும்?? எங்கும்
நிறைந்திருப்பது அந்தப் பிரம்மமே தான் என்ற இத்தகைய எண்ணம் ஏற்பட எத்தகைய புண்ணியங்களைச் செய்யவேண்டும்?? அப்படி ஒன்றுமே செய்யாமல் மிகவும் ஏழையாக இருக்கும் என்னை உங்கள் கருணை ஒன்றே காப்பாற்ற வேண்டும். ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!

ஜகதீ மவிதும் கலிதாக்ருதயோ
விசரந்தி மஹா மஹஸஸ்சலத:
அஹிமாம் சுரிவாத்ர விபாஸி குரோ
பவசங்கர தேசிக மே சரணம்!!
குருவே! தங்கள் உண்மையான ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டும் அத்தகைய ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு உலாவும் தேவாதி தேவர்களுக்கு நடுவே தாங்கள் ஒளி விட்டுப்பிரகாசிப்பது சூரியனைப் போல விளங்குகிறது. ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!

குருபுங்க புங்கவ கேதந தே
ஸமதாம் அயதாம் நஹி கோபி ஸுதீ:
சரணாகத வத்ஸல தத்வநிதே
பவ சங்கர தேசிக மே சரணம்!!
ரிஷபக் கொடியைக் கொண்ட பரமேஸ்வர ஸ்வரூபமே தாங்கள் தானே, குருக்களுக்கெல்லாம் மேலான குரு சிரேஷ்டரே! தங்களுக்கு ஈடு இணை எவரும் இல்லை. எப்படிப் பட்ட புத்திமானும் உங்களுக்கு இணையாக மாட்டானே! உம்மைச் சரணடைந்தால் கருணையுடன் ஆத்ம தத்துவத்தைப் போதித்து இவ்வுலக மாயையான சம்சாரக் கடலில் இருந்து தாண்டச் செய்பவரே! ஹே சங்கர குருவே தங்கள் திருவடி சரணம்!

விகிதா ந மயா விசதைககலா
நசகிஞ்சன காஞ்சந மஸ்தி குரோ
த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!
ஆழமாய் விரிந்த ஞானத்தில் சிறு கிளை அளவிற்கு கூட அறிவில்லாத அடியேனுக்கு அருள் கூர்ந்து வாழும் வழியை போதித்து வீழ்ச்சியில் இருந்து அடியேனை காப்பாற்றுவதற்கு நின் திருவடியை சரணடைந்தேன். ஹே சங்கர குருவே தங்கள் திருவடி சரணம்!

ஸ்ரீ குருப்யோ நமஹ !