நாராயணீயம் தினம்: டிசம்பர் 13, 2024
ஸ்ரீமத் பாகவதம்
Friday, December 13, 2024
நாராயணீயம்
Monday, July 11, 2022
ஆதிசங்கரர்- 18
சங்கரர் பாரதத்தில் நான்கு திசைகளிலும் நான்கு மடங்களை நிறுவினார்.
பத்மபாதரை பீடாதிபதியாகக் கொண்டு கிழக்கே பூரி ஜெகன்னாத்தில் ரிக் வேத ப்ரதானமாக கோவர்த்தன மடத்தை நிறுவினார்.
சுரேஷ்வராச்சாரியை பீடாதிபதியாகக் கொண்டு தெற்கே யஜூர் வேத ப்ரதானமாக சிருங்கேரியில் மடத்தை நிறுவினார்.
ஹஸ்தமாலாகாவை பீடாதிபதியாகக் கொண்டு மேற்கே சாமவேத ப்ரதானமாக துவாரகாவில் மடத்தை நிறுவினார்.
தோடகாச்சாரியாரை பீடாதிபதியாகக் கொண்டு வடக்கே அதர்வண வேத ப்ரதானமாகபத்ரியில் ஜோதிர் மடத்தை நிறூவினார்.
சந்திரமௌலீஸ்வர ஸ்படிக லிங்கம் மற்றும் ரத்னசர்வ கணபதி விக்ரகத்தையும் சுரேஸ்வரிடம் கொடுத்து பூஜித்து வருமாறு கூறினார்.
இந்த பூஜையை இன்றும் சிருங்கேறி மடாதிபதிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
சங்கரர் ஏற்றி வைத்த ஜோதி இன்றும் சிருங்கேரியில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
Friday, July 8, 2022
ஆதிசங்கரர் - 17 (தொடர்)
சர்வக்ஞபீடத்தில் அமர்தல்
------------------------------------
சங்கரர் இமயமலையில் கங்கைக் கரையில் தன் சீடர்களூடன் தங்கி வந்தார்.
அப்போது காஷ்மீரத்தில் அன்னை சாரதா ட்ஹேவியின் ஆலயம் உள்ளது.அம்கு ஒரு சர்வக்ஞபீடம் இருக்கிறது.இதில் எல்லாம் அறிந்த சர்வக்ஞர் மட்டுமே அமர முடியும்.
அதன் நான்கு பக்கங்களிலும் நான்கு வாசல்கள் உண்டு.வடக்கு,மேற்கு,கிழக்கு ஆகிய மூன்று திசைகளிலிருந்து அறிஞர்கள் வந்த அந்தந்த கதவுகள் திறந்தபடி உள்ளன.
ஆனால்,தெற்கு பக்கத்திலிருந்து ஒருவரும் வராததால் தெற்கு வாசல் மட்டும் மூடப்பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டார் சங்கரர்.
உடன், தென் திசைக்குச் சென்று ..தென்திசை கதவு வழியே அக்கோயிலுக்குள் நுழைய வேண்டும் என்று சென்றார்.அவர் தெற்கு வாயிலை அடைந்தார்.அங்கு பல மதங்களைச் சேர்ந்த அறிஞர்களை தமது வாதத் திறமையால் வென்றார்.தென் திசை கதவு திறக்கப்பட்டது.
சங்கரர்,பத்மபாதருடன் உள்ளே நுழைந்தார்.
அங்கிருந்த சிம்மாசனத்தில் அமரப் போனார்.
அப்பொழுது..சரஸ்வதி தேவியின் குரல் கேட்டது.இந்த சிம்மாசனத்தில் அமர சர்வக்ஞராய் இருந்தால் மட்டும் போதாது..சர்வசுத்தி உடையவராகவும் இருக்க வேண்டும் என்றாள் சரஸ்வதி.
அதற்கு சங்கரர்,பிறந்ததிலிருந்து தான் ஒரு பாவத்தையும் அறியேன்.நான் சர்வசுத்தன் என்றார்.
இதைக் கேட்டு மகிழ்ந்த சரஸ்வதி..சங்கரரை சர்வக்ஞபீடத்தில் அமரச் சொன்னாள்.
அதுமுதல் சங்கரர் ஜகத்குரு என அழைக்கப்பட்டார்.
Tuesday, June 28, 2022
ஆதிசங்கரர்- 16 (தொடர்)
தன் சீடர்களுடன் பல தலங்களுக்கு யாத்திரை செல்ல முடிவெடுத்தார் சங்கரர்.
ராமேஷ்வரம் சென்று வணங்கிய பின்னர் காஞ்சிபுரத்தை வந்து அடைந்தார்.அங்கு சாக்தர்கள் தந்திர வழிமுறைகளைப் பின் பற்றி வந்தனர்.அதை மாற்ற எண்ணிய சங்கரர்..சாக்கர்களை வாதத்தில் வென்று காமாட்சி அம்மனுக்கு ஸ்ரீசக்ரத்தை பிரதிஷ்டை செய்து வைத்தார்.ஸ்ரீசக்ரம் வைத்த பின் அம்பாளின் உக்ரம் குறைந்து சாந்த ஸ்வரூபியாய் அருள் பாலித்தார்.தாந்திரிக பூஜை முறையை வைதிக பூஜை முறைக்கு மாற்றினார்.
பின் காஞ்சியில் இருந்து புறப்பட்டு திருப்பதி சென்றார்.அங்கு வெங்கடாசலபதியை தரிசனம் செய்தார்.அங்கிருந்து கர்நாடகம் சென்று சங்கரர் அங்கு கபாலிகர்களையும்,பாஷாண்டகர்களையும் வாதம் செய்து வெற்றி கொண்டார்.அங்கிருந்து கோகர்ணம் சென்று சைவ குருவான திருநீலகண்டரை வென்றார்.அவரை அத்வைத சித்தாந்ததை ஏற்க வைத்தார்.பிறகு துவாரகா வந்த சங்கரர் வைஷ்ணவர்களை வென்று உஜ்ஜெயினி சென்றார்.
உஜ்ஜெயினில் பட்டபாஸ்கர் என்பவரை வென்றார்.இதனால் ஜைனர்கள் எதிர்த்தும்..அவர்களால் சங்கரரை வாதத்தில் வெல்ல இயலவில்லை.
பிறகு சங்கரர்,நவகுப்தர் எனும் சாக்கரை வென்றார்.இதனால் கோபமடைந்த நவகுப்தர், சங்கரருக்கு பகந்தரம் எனும் நோய் வரும்படி செய்தார்.ஆனால்..பத்மபாதரின் மந்திர சக்தி மூலம் அந்நோய் சங்கரரை நீங்கி நவகுப்தரையே சென்று தாக்கிய து.
பின், உஜ்ஜெயினிலிருந்து புறப்பட்டு இமயமலையை அடைந்தார் சங்கரர்.அங்கு தனது குருவான கோவிந்த பகவத்பாதரின் குருவான கௌடபாதரை சந்தித்து ஆசி பெற்றார்.
பின், தன் சீடர்களுடன் சில காலம் கங்கை நதிக்கரையில் தங்கினார்.
Thursday, June 23, 2022
ஆதிசங்கரர்-15(தொடர்)
ஆதிசங்கரரின் சீடர் பத்மபாதர் "சாரீரக பாஷ்யத்திற்கு" விளக்க உரை எழுதினார்.அதில் கொஞ்சம் பாகம் ஆதிசங்கரருக்கு படித்துக் காட்டினார்.பிறகு அவருக்கு தீர்த்தாடனத்தில் ஆர்வம் ஏற்பட ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டார்.தனது சாரீரக பாஷ்யத்தையும் உடன் எடுத்துச் சென்றார்.
போகும் வழியில் ஜம்புகேஷ்வரத்தில்..அவரது மாமாவின் இல்லம் இருந்த்து.அங்கேபுத்தகத்தை வைத்து விட்டு ,திரும்பி வருகையில் எடுத்துக் கொள்ளலாம் என்று ராமேஸ்வரம் போனார்.
இவர் இல்லாதபோது..அவரது மாமா இந்நூலை படித்துப் பார்த்தார்."இந்நூல் நம் சித்தாந்தத்தை அழித்துவிடும் போல இருக்கிறதே" என நினைத்தார்."புத்தகத்தை அழித்துவிட்டால் போச்சு.மறுபடி இதேபோல எழுதுவது கடினம் "என்று எண்ணினார்.
அவருக்கு இரண்டு வீடுகள் இருந்தன.ஒரு வீடு சிதைந்திருந்தது.அதில் தேவையற்ற சாமான்களைப் போட்டு வைத்திருந்தார்.அந்தப் புத்தகத்தை அங்கு வைத்துவிட்டு..அந்த வீட்டிற்கு தீ வைத்து விட்டார்.
பத்மபாதர்,ராமேஸ்வரத்திலிருந்து வந்ததும்..விபரீதம் நடந்து விட்டதாக வேஷம் போட்டார்.
ஆதிசங்கரரிடம் வந்த பத்மபாதர்..நடந்த விஷயங்களைக் கூறினார்.
"நீ முதல் அத்தியாயம் நான்கு பாதமும், இரண்டாம் அத்தியாயம் முதல் பாதமும் என்னிடம் வாசித்துக் காட்டினாய் அல்லவா?..அதைத் திரும்பச் சொல்கிறேன்.எழுதிக் கொள்.அதவது உலகிற்கு கிடைக்கட்டும்"என்று ..தான் ஒரே ஒருமுறை கேட்ட்தை கடகடவென சொன்னார் சங்கரர்.
முதல் ஐந்து பாதங்களுக்கு விரிவுரை ஆனதால் இந்நூலிற்கு "பஞ்ச பாதிகா"என்று பெயர்.
Tuesday, June 21, 2022
ஆதிசங்கரர்- 14 (தொடர்)
சங்கரர் தன் சீடர்களுடன் சிருங்கேரியில் 12 ஆண்டுகள் தங்கியிருந்தார்.அப்போது சீடர்கள் பல நூல்களையும், சங்கரர் எழுதிய நூல்களுக்கு விளக்கவுரையும் எழுதினார்கள்.
இவ்வாறு இருக்கையில் தன் தாயின் இறுதி நாட்கள் நெருங்குவதை தன் ஞானதிருஷ்டியால் சங்கரர் உணர்ந்தார்.
தன் சீடர்களிடம் தாயாரின் நிலையைப் பற்றிக் கூறி..காலடி வந்தார்.
மகனைக் கண்டு தாய் மகிழ்ந்தாள்.
சங்கரர்,மிகவும் அன்புடன்.."அம்மா..கவலைப்படாதே...உனக்கு என்ன ஆசை..என்று கூறு.." என்றார்.
தன்னை சிவலோகத்துக்கு அனுப்ப வேண்டும்..என தாயார் கூற..சங்கரரும் "சிவபுஜங்கம்" எனும் ஸ்டோத்திரத்தால் பரமசிவனைத் துதித்தார்.சிவகணங்கள் உடன் அங்கு சூலத்தை ஏன்றியபடி தோன்றினர்.
இவைகளினால் பயந்த தன் தாயாரின் வேண்டுகோளுக்கு இணங்க.மகாவிஷ்ணுவை வேண்டி ஒரு பாடல் பாடினார் சங்கரர்.
உடன் விஷ்ணுவின் தூதர்கள் வந்து..தாயாரை விமானத்தில் ஏற்றிக் கொண்டு வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றனர்.
சங்கரர் தாயாருக்கு இறுதிச் சடங்குகளை செய்யத் தொடங்கினார்.
சங்கரரின் உறவினர்களும்,ஊராரும் சன்னியாசியான அவர் நெருப்பு சம்பந்தப்பட்ட சடங்குகளில் ஈடுபடக் கூடாது என்றனர்.சங்கரர் மனம் தளராமல் தன் தாய்க்குக் கொடுத்திருந்த சத்தியத்தைப் பற்றிக் கூறினார்.அதை அவர்கள் கேட்பதாக இல்லை.
உடன் சங்கரர் உலக சம்பிரதாயத்தை மீறாமல்..அதேநேரம் ..தாய்க்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வகையில்..தன் வீட்டுக்கு அருகில் கட்டைகளை அடுக்கி..தனது யோக சக்தியால் வலது கையிலிருந்து அக்கினியை உண்டாக்கி அதில் தாயாரின் தகனக் கிரியைகளை செய்து முடித்தார்.
(தொடரும்)
Sunday, June 19, 2022
ஆதிசங்கரர்-13(தொடர்)