சங்கரர் பாரதத்தில் நான்கு திசைகளிலும் நான்கு மடங்களை நிறுவினார்.
பத்மபாதரை பீடாதிபதியாகக் கொண்டு கிழக்கே பூரி ஜெகன்னாத்தில் ரிக் வேத ப்ரதானமாக கோவர்த்தன மடத்தை நிறுவினார்.
சுரேஷ்வராச்சாரியை பீடாதிபதியாகக் கொண்டு தெற்கே யஜூர் வேத ப்ரதானமாக சிருங்கேரியில் மடத்தை நிறுவினார்.
ஹஸ்தமாலாகாவை பீடாதிபதியாகக் கொண்டு மேற்கே சாமவேத ப்ரதானமாக துவாரகாவில் மடத்தை நிறுவினார்.
தோடகாச்சாரியாரை பீடாதிபதியாகக் கொண்டு வடக்கே அதர்வண வேத ப்ரதானமாகபத்ரியில் ஜோதிர் மடத்தை நிறூவினார்.
சந்திரமௌலீஸ்வர ஸ்படிக லிங்கம் மற்றும் ரத்னசர்வ கணபதி விக்ரகத்தையும் சுரேஸ்வரிடம் கொடுத்து பூஜித்து வருமாறு கூறினார்.
இந்த பூஜையை இன்றும் சிருங்கேறி மடாதிபதிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
சங்கரர் ஏற்றி வைத்த ஜோதி இன்றும் சிருங்கேரியில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment